தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்பது மடத்தனம் - பிஜெ

ஆண்டாள் விடயத்தில் காவிக் கூட்டம் அயோக்கியத்தனம் பண்னாமலிருந்தால் சங்கராச்சாரியார் மீது இத்தனை எதிர்ப்பு வந்திருக்காது. அது ஒரு வகை பதிலடிதான். சங்கரர் மரியாதை செலுத்தாமலிருப்பதே தமிழுக்கு அவர் செய்த மரியாதை. அதுதான் தமிழுக்கும் மரியாதை. அந்த வகையில் பிஜே அவர்களும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கத் தேவையில்லை என்று சொல்லித் தமிழுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். 

வாழும் நாட்களில் 24 மணிநேரமும் இஸ்லாமியக் கொள்கையின் அடிப்படையில் வாழவேண்டும் என்று கோருகிறவர் பிஜே. அது சாத்தியமா ? இல்லை. எல்லாருக்குமே நல்லாத் தெரியும். ஆனாலும் முடிந்த வரை அமல் படுத்துகிறார்கள். இதை நம்பிக்கை என்று சொன்னால் கூட விட்டு விடலாம். இதை எல்லாருக்கும் பொதுவான கொள்கையாக, கருத்து போலச் சொல்வதால்தான் சகிக்க முடியாத்தாக இருக்கிறது

தமிழ்த்தாயை கடவுள்னு யாரு சொன்னா ? பலகடவுள்ன்னு வர்றதுன்னு இவரே சொல்லிக்கறார். தமிழ்த்தாய்தான் தமிழ்நாட்டைக் காப்பாத்தறான்னு யாருப்பா இவருகிட்ட சொன்னது ? இவர்கள் முகம்மது நபியை ஆகா ஓகோன்னு புகழ்றாங்க. அதை நாம் முகம்மது நபி ஏன் கடவுள் மாதிரி புகழ்றீங்கன்னு கேட்ட என்ன சொல்வாங்க. நாங்க முகம்மது நபியை வணங்க மாட்டோம். ஆனா புகழ்வோம். அது மாதிரிதான் தமிழ் மொழியை புகழ்றோம் வாழ்த்தறோம்.

அல்லா அல்லான்னு நீ யாரைக் கூப்டற ? எந்த வருசம் பொறந்தான் அவன் ? எப்ப செத்தான் ? இல்ல இன்னும் இருக்கானா ? அல்லா அல்லான்னு இல்லாதவனை வணங்கச் சொல்ற அத மத்தவனையும் ஏத்துக்கச் சொல்ற ?


பிஜே அவர்கள். யாராலும் இவருகிட்ட விவாதமே பண்ண முடியாது. ஏதாவது ஒரு சொல்லைப் பிடித்துக் கொண்டு அதற்கு நூறு விளக்கம் சொல்லி திணறடிப்பதே இவர்களின் விவாதத் திறமை. மத அடிப்படைவாதம் என்று சொன்னால் அது எல்லா முஸ்லிம்களையும் குறிக்குது என்று வாயையும் அடைப்பது, பர்தா விமர்சனம் பண்ணா அது வன்மம், சமூகத்தின் மீது காழ்ப்பு என்று அடிப்பதும் தொடர்கிறது.

அந்த வகையில் இப்போ தமிழ்த்தாயை விமர்சனம் பண்றாப்ல. இதை நான் தமிழ் மீது இருக்கும் வெறுப்பு/காழ்ப்பு என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஏன்னா நம்ம வேற அவங்க வேற.

எதையெடுத்தாலும் கடவுள் நம்பிக்கையுடன் தொடர்பு படுத்தி, அல்லா வுக்கு வணங்குதல் - மற்றவைக்கு வணங்குதல் என்று ஒப்பீடு செய்தே அனைத்தையும் விமர்சனம் செய்வது அன்னாரின் வாடிக்கை. வெற்று மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வதையும், தலைவர்கள் சிலைகளுக்கு மாலை போடுவதையும் கூட தமது பகுத்தறிவினால் கட்டுடைப்பார்.

பெண்கள் மேற்கத்திய உடையணிந்தால் அதை ஏற்றுக் கொள்ளாத ஆணாதிக்க சமூகம் இந்தியாவுடையது. அதை தன்னுடைய பர்தா ஆதரவுக்குப் பயன்படுத்துவதற்காக இந்தியக் கலாச்சாரமும் பெண்கள் மூடி வைக்க வேண்டும் என்று கூறுகிறது, என்று தமக்குத் தோதாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். அதே நேரம் சிலையை வணங்குவதை மட்டும் கலாச்சாரமாக ஏற்றுக் கொள்ளாமல் எதிர்ப்பார்கள்.

இவர்களின் கொள்கைப்படி, சக மனிதனுக்கும் மரியாதையாக வணக்கம் சொல்வது இறைவனுக்கு மாற்று வைப்பதாகி விடுகிறது. இறைவனை வணங்குவதும் ஒன்னு மனிதனுக்கு வணக்கம் சொல்வதும் ஒன்னு. வணக்கம் சொல்வது ஒரு வகை ஏற்றத் தாழ்வு என்று சொல்ல முடியும். ஆனால் வழிபாடு ஆகுமா ?

இப்ப முஸ்லிம்கள் பயன்படுத்தற நவீன வசதிகள் குறித்த அனுமதி வசனம் எதுவும் இஸ்லாமில் இல்ல என்றாலும் அதை சாதகமாப் பயன்படுத்தி எல்லா வசதிகளையும் அனுபவிக்கிறார்கள். ஆனா இந்த மாதிரி விசயத்துக்கு மட்டும் மத அளவுகோலைக் கொண்டு வந்திடுவார்.

என்னவோ ஒரு கடவுளாம் அவனுக்கு எந்தத் தேவையுமே இல்லையாம். ஆனா அவனை வணங்கறதுக்காகவே மனிதனைப் படைச்சானாம். அதுக்கு அஞ்சு தடவை மண்டி போடணுமாம். இது ஒரு லாஜிக்கா ? இதுக்கு ஒரு மார்க்கமா ? சபை நாகரிகம் என்பதை மட்டும் இவர் எப்படி ஏத்துக்கிறார். பாட்டு முடிய வரைக்கும் இருந்துட்டுப் போனா அது மரியாதையாம். அதை எப்படி இஸ்லாமியப் பகுத்தறிவு ஏத்துக்குது ?

தமிழ்த்தாயை கடவுள்னு யாரு சொன்னா ? பலகடவுள்ன்னு வர்றதுன்னு இவரே சொல்லிக்கறார். தமிழ்த்தாய்தான் தமிழ்நாட்டைக் காப்பாத்தறான்னு யாருப்பா இவருகிட்ட சொன்னது ? இவர்கள் முகம்மது நபியை ஆகா ஓகோன்னு புகழ்றாங்க. அதை நாம் முகம்மது நபி ஏன் கடவுள் மாதிரி புகழ்றீங்கன்னு கேட்ட என்ன சொல்வாங்க. நாங்க முகம்மது நபியை வணங்க மாட்டோம். ஆனா புகழ்வோம். அது மாதிரிதான் தமிழ் மொழியை புகழ்றோம் வாழ்த்தறோம்.

அல்லா அல்லான்னு நீ யாரைக் கூப்டற ? எந்த வருசம் பொறந்தான் அவன் ? எப்ப செத்தான் ? இல்ல இன்னும் இருக்கானா ? அல்லா அல்லான்னு இல்லாதவனை வணங்கச் சொல்ற அத மத்தவனையும் ஏத்துக்கச் சொல்ற ? அதை எப்படி எல்லா உலக மக்களுக்குமான நன்னெறின்னு சொல்ற ?

நாட்டுப் பண்ணுக்கு எழுந்து நிற்பது என்ன வகையில் சேர்த்தின்னு சொல்வாரா ? அதுவும் மடத்தனம்தானே ? அதை எந்த நாட்டிலும் சொல்ல முடியாது. ஆனால் எல்லா நாட்டிலும் எழுந்து நிற்பது கட்டாயமாகத்தானே இருக்கும். எப்படி எல்லா நாட்டிலும் இவர் சொன்ன கொள்கைப்படி வாழ்வது ?


        

இசைக்கு இஸ்லாமில் இடைமில்லதானே. நாட்டைப் புகழ்வது/ போற்றுவதற்குத்தானே நாட்டுப் பண். சௌதி அரேபியாவுக்கு எதற்கு நாட்டுப் பண் ?

சௌதியின் இராணுவ அணிவகுப்பின் போது ராணுவத் தளபதிகளும் சௌதி மன்னருக்கு சல்யூட் அடிக்கிறார்கள். சௌதி  மன்னரும் அவருக்கு பதில் சல்யூட் வைக்கிறார். இராணுவ சல்யூட் குறித்த இஸ்லாமின் நிலை என்ன ? வணக்கம் சொல்வதே தவறு, எழுந்து நிற்பதே மடத்தனம் என்பதெல்லாம் சரியென்றால் இது என்ன வகையில் வரும் ? ஏன் எதற்கெடுத்தாலும் இஸ்லாம்/ சௌதி என்கிறேன் என்றால் இவர்கள் இஸ்லாம் எங்கள் நம்பிக்கை/மதம் என்று கூறுவதில்லை. கொள்கை/மார்க்கம் என்று கூறுவதால்தான். நம்பிக்கையை விட கொள்கையைத்தான் அதிகம் விமர்சிக்க வேண்டும். இதில் எந்தக் காழ்ப்பும் இல்லை வெறுப்பும் இல்லை. வெறும் கேள்விகள்தான். 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்