ஆகாவென்றெழுந்தது பார் மார்கழிப் புரட்சி !

வைரமுத்து விளக்கம்.
       
       

கண்ணதாசன் மாதங்களில் அவள் மார்கழி என்று பாட்டெழுதினால் அது பகவத் கீதைய ஆன்மிகத்தை பரப்புவதாகப் பேருவகை அடையவேண்டும். அதே வைரமுத்து அற்றைத் திங்கள் அந்நிலவில் எழுதினால் அதை சங்க இலக்கியத்திலிருந்து திருடிச் சம்பாதித்தான் என்றும் சொல்ல வேண்டும் இல்லையென்றால் நீங்கள் மார்கழிப் புரட்சித் துரோகியாவீர்கள். வைரமுத்து திருடி எழுதியதைக் கண்டு பிடிக்க முடிந்த ஆண்டாள் பக்தர்களால், வேறொருவரின் ஆண்டாள் குறித்த கருத்தை எச்சரிக்கையோடும் பெருமைப்படுத்தும் விதமாகவும் மேற்கோள் காட்டிய வைரமுத்துவை, ஆண்டாளை வைரமுத்துவே வேசி என்று சொன்னதாகவும் நீங்கள் நம்ப வேண்டும். இல்லையென்றால் நீங்கள் இந்துவாக இருக்கத் தகுதியில்லாதவர்.

இந்துச் சாமியார்கள் வெள்ளைகாரிகளை மடக்கிப் போட்டு யோகாவும், ஆன்மிகமும் கலந்து அடித்தால், இந்துக்கலாச்சாரம் மேலை நாட்டில் பரவுகிறது என்று சொல்ல வேண்டும். அதே நேரம் இங்கே நடக்கும் கிறித்தமதமாற்றத்தை கிறித்தவ சதி என்றும் சொல்ல வேண்டும். ஆகவே நீங்கள் இந்தப் புரட்சியில் நடுநிலை வகிக்கமுடியாது. உங்களால் இந்து மதத்தைக் காப்பாற்றவே முடியாது.

கிறித்தவர்களை வைத்து தமிழை, ஆண்டாளைப் புகழும் வைரமுத்துவை தமிழில் தரக்குறைவான கொச்சையான மொழியில் திட்டுவதை இந்துக்களின் எதிர்வினை என்று ஏற்க வேண்டும். ஆண்டாள் பெருமாளைக் காதலானகப் பாவித்துப் பாடுவது பெண்ணியப் புரட்சி என்று சொல்ல வேண்டும். அதே வேளை வைரமுத்து திரைப்படக் குத்துப் பாடல்களை ஆபாசம் என்றும் வகை பிரிக்க வேண்டும்.

இதைப் புரட்சியாக அங்கீகரிக்கக் காரணமும் நியாயமும் உண்டு. பொதுவாக திராவிடக் கழக்த்தவர், திராவிட முன்னேற்றக் கழகத்தவர்தான்,  நாத்திகர்கள்தான் இழிவாகப் பேசுவார்கள், ஆபாசமாகப் பேசுவார்கள் என்று காலங்காலமாக இருந்த கருத்தை உடைத்த ஆத்திகர்களுக்கு, பக்தர்களுக்கு, குறிப்பாக ஆன்மிகவாதிகளுக்கு புரட்சிகர வாழ்த்துகளை இணையப் போராளிகள் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த வருடம் நடந்த மஞ்சுவிரட்டுக்கு ஆதரவான போராட்டத்தைப் போலவே பிரபலமாகும் என்று எண்ணி எச். ராசா தொடங்கி வைத்த இந்த மார்கழிப் புரட்சியில் எதிர்பாரா விதமாக நித்யானந்தரின் பக்தர்கள் இடையே வந்து தன்னிச்சையாக இணைந்து புரட்சிக்குத் தோள் கொடுத்து போராளிகளான ஆண்டாள் பக்தர்களையே ஓரங்கட்டி இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். கடந்த ஆண்டு நடந்த மஞ்சுவிரட்டு ஆதரவான போராட்டத்தில் இறுதியில் போராட்டக்காரர்கள் கெட்ட வார்த்தை பேசினார்கள் என்று முக்கியமான குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதே போல் இங்கும் கெட்டவார்த்தை பேசப்படுகிறது. தேவதாசி என்று வைரமுத்து சொன்னார் என்பதை இந்தக் கூட்டம் வேசி என்று சொல்லிவிட்டார் என்று எத்தனை முறை சொல்லி இன்பமடைகிறார்கள். உண்மையில் ஆண்டாள் மேல் என்ன ஆத்திரம் இவர்களுக்கு.

  ஆனால் இங்கே வைரமுத்துவை ஆபாசமாகத் திட்டியதிலிருந்து புரட்சி வேகம் கண்டுள்ளது. தமிழுக்காகப் போராடுகிறோம் என்று மார்தட்டப்படுகிறது, கலாச்சாரம் என்று என்னென்னவோ சொல்லி முட்டுக் கொடுக்கிறார்கள். எச்.ராசா இரண்டாவது முறையாகத் தீக்குளிப்பேன் என்று சொல்லியிருக்கிறார். ஜீயர் இரண்டாவது முறையாக சாகும்வரை பட்டினிப் போராட்டத்தை அறிவிக்கிறார். ஒருவர் இரண்டு முறை சாகும் வரை பட்டினிப் போராட்டம் நடத்துவது உலகில் இது வரை நடக்காதது.

ஆண்டாள் பக்தர்களின் திருவாய் மொழியினைக் கேளச் சகியாத ஆண்டாள் காதைப் பொத்திண்டா பாருங்கோ !

ஆண்டாள் இன்று இருந்திருந்தால் அல்லது ஆண்டாளின் ஆன்மா இருந்து இன்று நடக்கும் கூத்துக்களையெல்லாம் பார்த்தால் பெருமாளே பெருமாளே இவாகிட்ட இருந்து என்னக் காப்பாந்துங்கோ பெருமாளே என்று ஆண்டாளே புதிய பாசுரங்களைப் பாடியிருப்பார். ஆண்டாள் பக்தர்களின் நாறவாய் மொழிகளை முடிந்தால் காது பொத்தாமல் கேளுங்கள். நித்யானந்தம் !!

         

இன்னொரு முக்கியமான காணொலியைத் தேடினேன் யூட்யூபில் கிடைக்கவில்லை. அதனுடைய இரண்டாம் பாகமே கிடைத்தது. இந்தப் பெண் பேசியவைதான் அனைவரையும் போய் சேர்ந்துள்ளது. இதில் பேசுகிறவர்கள் யாருமே தானாகப் பேசியது போல் தெரியவில்லை. மிகவும் சிரமப்பட்டு நடித்தது அப்பட்டமாகத் தெரிகிறது. இவர்கள் பேசும்போது பார்த்தால் இவர்களுக்கே சிரிப்பை அடக்க முடியாமல் தவிக்கிறார்கள். முடிந்தால் பார்ப்பவர்களும் சிரியுங்கள். வழிபாடு என்பதையே வழிப்பாடு என்கிறார். பொழுது போகலையாம், பூஜை எல்லாம் முடிச்சுட்டு ஒரு ஸ்பெஷலாக் குடுக்கலாம்னு...

          

இங்கே பாருங்கள்  மேலைநாட்டவர்கள் நம் பெருமைகளைப் பேசுவதை. நித்யானந்தர் ஆன்மிகம் மட்டுமல்லாமல் நமது தமிழையும் மேலைநாட்டு வெள்ளையர்கள் வாயிலாகப் பேச வைத்து தமிழை உலக அளவில் பெருமைப்படுத்தியிருக்கிறார். இதையே நம் தமிழர்கள் செய்தால் பல்லாயிரம் லைக்ஸ் ஃபேஸ்புக்கில் வரும் வெளிநாட்டுக்காரர் செய்ததால் இதற்கு எத்தனை லைக்ஸ் வரும் ஃப்ரண்ஸ் ! விக்டர் ஜேம்ஸ் என்று வைரமுத்துவுக்கு ஞான்ஸ்நானம் செய்து வைத்த மார்கழிப் போராளிகள் இந்தக் கிறித்தவர்களை ஒரே அடியில் தமிழர்களாகவும் இந்துவாகவும் மாற்றி வைத்த நம்ம நித்யானந்தரிடன் நாம் கடமைப் பட்டுள்ளோம். ஒரு வேளை இந்து மதத்திற்கு ஆதரவளிப்பது நடித்து இந்துக்களுக்குக் கெட்ட பெயர் உண்டாக்கும் நோக்கத்தில் பக்தர்கள் போல் நித்யானந்தா ஆசிரமத்தில் நுழைந்து இந்துக்களுக்கு எதிராக கிறித்தவமிசனரிகள் சதி செய்யும் வாய்ப்புள்ளதால் தருமப் போராளிகள் உஷாராக இருக்கவும்.


சூத்திரன் பார்ப்பான் ஆலய நுழைவு பற்றிய எச்.ராசா அவர்களின் கருத்து


புரட்சியை அடுத்த கட்டத்திற்குக் (அதாவது வேற Level) கொண்டு சென்ற ஆன்மிகவாதிகள்.


Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்