முஸ்லிமாக இருந்தால் போதும் கொலை செய்யப்படலாம்

கடந்த வியாழக்கிழமை (22-06-2017) ஒரு கொலை நடந்திருக்கிறது. மோடியின் இந்தியாவில் இது மிகவும் சாதாரணமாக நடக்கும் கொலைதான். ஏனென்றால் ஆட்சி செய்பவர்கள் அத்தகையவர்களாக இருக்கின்றனர். இதுவும் நாம் சாதாரணமாகக் கடந்து விடுகிற மாதிரியான நிகழ்வுதான். 

1. செப் 2015 : முஹம்மது அஹ்லக் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக அடித்தே கொல்லப்பட்டார். ஆனால் அவர் வைத்திருந்தது ஆட்டுக்கறி. கொன்றவனின் தந்தை ஒரு மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனம் வைத்திருப்பவர்.

2. அக் 2015 : உத்தம்பூரில் ஜாஹித் ரசூல் பட் என்னும் 16 வயது சிறுவன் மாடுகள் ஏற்றிய வண்டியில் இருந்த குற்றத்திற்காக அடித்து கொல்லபட்டான்.

3. மார்ச் 2016 : லத்திஹரில், முஹம்மது மஜ்லும், ஆசாத் கான் இருவரும் மாடுகளை விற்பனை செய்த காரணத்திற்காக தூக்கிலிடபட்டு கொலை செய்யபட்டனர்.

4. ஏப்ரல் 2017 : அஸாம் மாவட்டம் அபூ ஹனீஃபா, ரியாஸூதீன் அலி இருவரும் மாடு விற்பனை செய்பவர்கள் என சந்தேகபட்டு அடித்தே கொலை செய்யபட்டனர்.

5. ஏப்ரல் 2017 : பெஹ்லு கான் பசு காவலர்கள்!? என்னும் பயங்கரவாதிகளால் அடித்து துன்புறுத்தபட்டு கொல்லபட்டார்.

6. மே 2017 : மாலீகன், மஹாராஸ்ட்ராவில் இரண்டு இஸ்லாமிய வியாபாரிகள் மாட்டிறைச்சி விற்பனை செய்ததற்காக வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தில் ஒருவர் பால் பண்ணைக்கு மாடுகளைக் கொண்டு சென்றபோது இந்துவெறி மாட்டுவெறி பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு இறந்தார்.  

(தகவல்கள் ஃபேஸ்புக்கில் சித்திக் என்பவரின் பதிவிலிருந்து)

ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் கொல்லப்பட்டவன் ஒரு முஸ்லிம். கொல்லப்பட்ட காரணமும் நமக்கு ஆர்வமூட்டுவதாக இல்லை. ஏனென்றால் அவன் "தேசப்பகைவன்" அல்லது "மாட்டிறைச்சி உண்பவன்" அல்லது "முல்லா" அல்லது அம்மூன்றுமே எனக் கொள்ளலாம். அதனால் அவனைக் கொல்லலாம். இத்தனைக்கும் அவன் 16 வயதுச் சிறுவன். ரம்ஸானைக் கொண்டாடுவதற்காக பொருட்களை வாங்கி வரக் கடைக்குச் சென்றிருக்கிறான், ஹரியாணாவிலிருந்து டெல்லிக்கு. திரும்பி வருகையில் பயணியர் ரயிலில் வந்திருக்கிறான். அவனுடன் அவனது சகோதரர்கள் மூவரும் வந்திருக்கின்றனர். 

அப்போது ஒரு கும்பலும் ரயிலில் ஒரு நிறுத்தத்தில் ஏறியிருக்கிறது. இவர்களுடன் இருக்கையில் அமர்வது தொடர்பாக சண்டை வந்திருக்கிறது. இவர்களின் முஸ்லிம் அடையாளமான தாடியும் குல்லாவும் சேர்ந்து இவர்களை பலியாக்கியிருக்கிறது. தவிரவும் ஜுனைத் மாட்டுக்கறி வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இவர்களுடன் சண்டையிட்ட அக்கும்ப்பல் இவர்களை, இவர்களின் மதத்தை அவமானப்படுத்தி ஏசியிருக்கிறது, குல்லாவைப் பிடுங்கி வீசியது, தாடியைப் பிடித்து இழுத்திருக்கிறது. "தேசப்பகைவன்", "மாட்டிறைச்சி உண்பவன்", "முல்லா" என்றெல்லாம் அவர்களை வசைபாடிய கும்பல் அவர்களைத் தாக்கியுள்ளது. இச்சண்டையில் இச்சிறுவனை நான்கு பேர் பிடித்துக் கொள்ள, கத்தியால் குத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளான். இந்தக் கொடிய நிகழ்வு நடக்கும் போது சுற்றியிருந்தவர்கள் இவர்களை "தொலைத்துக் கட்டச்" சொல்லி ஆரவாரம் செய்துள்ளனர். இது ஆர் எஸ் எஸ் இயக்க பயங்கரவாதிகள் செய்ததா அல்லது அந்த கொடிய பயங்கரவாதக் கொலைக் கொள்கைகாளால் சைக்கோவான கும்பலால் செய்யப்பட்ட கொலையா என்று தெரியவில்லை. இது ஒரு வெறுப்புணர்ச்சியால் விளைந்த கொடூரக் கொலையாகும். 

இந்துக்கள் பசுக்களை வணங்குகிறார்கள், அதைக் கொல்வது பாவம் என்பது எல்லா இந்துக்களுக்கும் பொதுவான நம்பிக்கையல்ல. இங்கே பசுவை வணங்கும் ஜாதியைச் சேர்ந்தவர்களே அதுவும் மாமிச உணவு உண்ணாதவர்களே மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனங்கள் நடத்தி, மாட்டிறைச்சி, தோல் ஏற்றுமதி மூலமாக பணக்காரர்களாக விளங்குகிறவர்கள். ஆனாலும் பசு இந்துக்களின் தெய்வம் என்ற போலிக் கருத்தை உற்பத்தி செய்து அதை சமூகம் முழுவது பரவச் செய்ய முடியும், அதைக் கொல்பவர்களை, உண்பவர்களை, விற்பவர்களை, வாங்குபவர்களை கொலை செய்ய பசுக் காவலர்களால் முடியும். இதெல்லாம் ஒரு நாடா ! உண்மையில் அவர்கள் பசுக் கறியை வைத்திருக்கக் கூடத் தேவையில்லை, அப்படி ஒரு வதந்தியையும் அவர்களே உண்டாக்குவார்கள், அவர்களை அடித்தே கொல்லவும் செய்வார்கள். அப்பேர்ப்பட்ட யோக்கியர்கள் இந்த நாட்டை அப்பேர்ப்பட்ட கொள்கையுடன் ஆள்கிறார்கள். கேவலம் ! என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மிகப்பெரும் அவநம்பிக்கையாக உணர்கிறேன் இந்த நாட்டைப் பற்றி !

ஒரு முஸ்லிமைக் கொல்ல இனிக் காரணம் எதுவும் பெரியதாக வேண்டியதில்லை. அவன் மாட்டுக்கறி வைத்திருந்தான் என்று சொன்னால் போதும். இன்னும் பத்தாயிரம் முஸ்லிம்கள் கோரமாகக் கொல்லப்பட்டாலும் இந்து சமூகம் எந்தக் குற்ற உணர்ச்சியும் கொள்ளப்போவதில்லை. இந்துக்களின் மௌனம் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகளுக்குக் கொடுக்கப்படும் ஆதரவே அன்றி வேறில்லை. அந்தளவுக்கு சமூகமே வக்கற்று தந்நலமேறி, அலட்சியமயமாக உள்ளது. இந்து பயங்கரவாதமோ இந்துக்கள் பெயராலேயே அனைத்து வன்முறைகளையும் முஸ்லிம்களின் மீது செலுத்திக் கொண்டு வருகிறது. நாமெல்லாம் 2017 ஆம் ஆண்டில் இதை மௌனசாட்சிகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மோடி துலுக்கனுக்கு பாடம் புகட்டினார் என்றுதானே பாஜகவை ஆதரிக்கும் மனநிலை பலருக்கு, அவர்களுக்கு மத்தியில் வாழும் நாம் என்ன செய்ய முடியும் ?

ஜுனைத்

ஜுனைத் பிணமாக
ஜுனைத்தின் இல்லத்தில்

நன்றி - http://www.newsjs.com/url.php?p=http://www.hindustantimes.com/delhi-news/how-could-they-hate-us-so-much-family-in-shock-after-16-year-old-muslim-boy-stabbed-to-death-on-train/story-TEzAfE9atfWv0EHaXJm6JJ.html
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்