சின்னப் பெருமை

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
ஏப்ரல் 29 ஆம் நாள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள். அந்த நாளே எனது பிறந்தநாளும் என்பதில் அற்பத்தனமான ஒரு மகிழ்ச்சி என்னுள் எழுகிறது. அவரை தமிழ் தேசியக் கவி என்றும் கூறலாம். தமிழுணர்ச்சி ததும்பும் பாடல்களை எழுதியவர். அவரைப் பற்றி இன்னும் முழுவதும் அறியாமல் இருப்பது வெட்கமாக இருக்கிறது.  அவரைப் பற்றி சில செய்திகள். 


-அவர் பிறந்த நாள் - 29-04-1891

-இவரது மிகச் சிறந்த வரியாகக் குறிப்பிட வேண்டிய பாடல்களில் எனக்குப் பிடித்தவை

தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்
இன்னொன்று,

கொலைவாளினை எடடா
கொடியோர் செயல் அறவே 

பெரியார் ஏற்றுக் கொண்ட கவிஞர் - பெரியாரை ஏற்றுக் கொண்ட கவிஞர்

பாவேந்தரின் படத்தைத் திறந்து வைக்கும் பெரியார்

டெல்லி இந்தி ஏகாதிபத்தியம் இந்தியா முழுவதும் இந்திமயமாக்கும் வெறியில் இருக்கும் இவ்வேளையில் இந்தப் பாடல் இன்றும் பொருந்துகிறது.

தில்லி ஒழிக!

செந்தமிழ் நாட்டைத் தில்லி ஒழிக்குமுன்
தில்லிதன்னை ஒழிக்க வேண்டும் நாம்.

குந்திச் சிறிய கதைபேசித் திரியும்
குள்ளத் தலைவர் குற்றம் செய்தனர்

இந்திச் செய்தியில் நடந்த தெப்படி?
இன்பத் தமிழை மாய்ப்பதும் கண்டோம்!
பைந்தமிழ் நாட்டுக் குள்ள அதிகாரம்
பத்தில் ஒன்றும் பலித்ததா நமக்கு?

நாட்டினை ஆண்ட தமிழா அடிமைகள்?
காட்டு மிராண்டிக் கழுதையா ஆள்வது?
நாட்டையும் மொழியையும் நசுக்குதல்
கண்டும்;
நாய்வாழ்க் கையைநாம் நாடுதல் நல்லதா?

புலவர் உள்ளனந் எதற்குத்தாம்
உள்ளனர்?
பொன்னுளார் உள்ளனர் எப்பயன்
கண்டோம்?
கலைஞர் வாழ்கின்றார்; எதற்காக
வாழ்கின்றார்?
கைவிலங் குக்கு மெருகு போடவா?

சோறுண்ணுகின்றோம்;
நாயுண்ண வில்லையா?
துன்பமற்ற தலைமுறை செய்வோம்
ஆறு பாய்ந்தெனத் தமிழர்கள்
பாய்க!
அழிக்கும் பகையை
அழிப்பதற்கே!
 

ஆங்கிலத்தைக் கற்க வற்புறுத்திய பெரியாருக்கு எதிராகவும், அவரது எழுத்துச் சீர்திருத்தத்திற்கு எதிராகவும் தனது எழுதுகோலைச் சீறியிருக்கிறார் புரட்சிக்கவிஞர். பெரியார் ஏற்றுக் கொண்ட ஒரே கவிஞர் பாரதிதாசன் மட்டுமே என்பது இங்கே தனிச்சிறப்பு. பெரியாரின் கொள்கைகளையும் தனது பாட்டில் வடித்தவர் புரட்சிக்கவிஞர்.

தமிழால் தமிழர் ஆயினர் அன்னவர்
தமிழை ஒழிக்கவும் தளரா துழைத்தனர்.

தமிழால் தமிழர்க்குத் தலைவர் ஆயினர்;
தமிழால் தலைமை அடைந்த #அவர்கள்
'தமிழில் ஏதுளது' என்று சாற்றுவர்.

தமிழைப் பேசித் #தலைவர் ஆயினர்
தமிழை எழுதித் தலைவர் ஆயினர்
'தமிழால் பயன் ஏது?" என்று சொன்னார்.

தமிழர் வாழத் தக்கவை ஆன
எல்லாக் கருத்தையும் இயம்பி வந்தனர்;
எல்லா உண்மையும் எடுத்துக் காட்டினர்
அரைநூற் றாண்டாய் அறிவு புகட்டினர்

அந்த அருமைத் தலைவரே இந்நாள்
ஆங்கிலம் தாயாய் அமைக என்றும்
தமிழால் உருப்படோம் என்றும் சாற்றினர்
தமிழர் தலைவர் தமிழாற் பேசியும்
தமிழால் எழுதியும் தந்த கருத்தினைத்
தமிழர் தங்கு தடையின்றி உணர்ந்தனர்
உணர்ந்துதாம் நன்னிலை உற்றனர் என்க.

இதனைத் தலைவரும் ஏற்றுக் கொள்வர்!
அன்றியும் அருமைத் தமிழே அன்றி
வேறுமொழி எமக்கு வராதென விளம்புவர்.
தமிழே தலைவ ராக்கியது, மற்றும்

தமிழே புகழ்பெறச் செய்த தென்பதை
எவரும் மறுக்க இயலா தன்றோ?
இப்படிப் பட்ட தலைவர் என்பவர்
தமிழில் இலக்கியம் இல்லை என்றனர்!

தலைவரைச் செய்தது தமிழ்இலக் கியமே
தமிழினம் படைத்தது தமிழ்இலக் கியமே
தமிழைத் திறம்படப் பேசவும் எழுதவும்
வைத்தது யாது? வண்டமிழ் இலக்கியம்!

தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணத்தை
உண்டு பண்ண உதவ வில்லை
என்று தமிழர் தலைவர் சாற்றுவர்;
அதே நேரத்தில் அந்தத் தலைவர்
முப்ப தாண்டாய் முளைத்த இலக்கியம்
எத்தனை ஆயிரம் என்பதை அறியார்!
 

தமிழ் இலக்கியங்கள் ஒரு குப்பை என்று சொன்ன பெரியாருக்கு எதிராக எழுதியதுதான்.

நூலைப்படி-சங்கத்தமிழ் நூலைப்படி! -முறைப்படி நூலைப் படி! -சங்கத்தமிழ் நூலைப்படி!
காலையில் படி, கடும்பகலில் படி,
மாலை இரவு, பொருள்படும்படி

என்ற கவிதை.  அவரின் அடுத்த பிறந்த நாளுக்கு இன்னும் சிறப்பான முறையில் எழுத வேண்டும்

செய்திகள். படங்கள் ஃபேஸ்புக்கிலிருந்து எடுத்தவை.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

2 கருத்துகள்:

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்