தொகுப்புகள்

எழுதுவதன் தொடர்ச்சி விட்டுவிடக்கூடாது என்பதற்காக ஏதாவது எழுத வேண்டியிருக்கிறது. எழுதவதில் கிடைக்கும் உணர்வும் ஒரு இன்றியமையாத காரணம். பணிச்சுமையும், வாசிப்பே இல்லாத நிலையும், அயர்ச்சியும் இணைந்து வலைப்பூவின் பக்கமே வரவிடுவதில்லை. முடிந்தவரையில் இணைய வாசிப்பு மட்டுமே தொடர்ந்து இருக்குமாறு பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதனால் இந்தப் பதிவில் பிற இடங்களில் வாசித்தவை மட்டும். 

நீண்ட நாட்களுக்குப் பிறகு தட்டத்தின் மராயத்து என்றொரு மலையாளப்படம் பார்த்தேன். தமிழ்த்திரைப்படம் போல் இருந்து விடுமோ என்று தொடக்கத்தில் திரைக்காட்சிகள் அச்சத்தைத் தந்தாலும் போகப் போக மலையாளத் திரைப்படத்தின் இயல்பு வந்து விடுகிறது. சின்னச் சின்னத் திருப்பங்கள், மெலிதான நகைச்சுவை, நெகிழ்ச்சிகள், சுவாரஸ்யம், வசனம் என்று எல்லாவகையிலும் நன்றாக இருந்தது.  மலையாளத் திரையுலகைப் பொறுத்தவரையில் மிகச்சிறப்பான அல்லது புதுமையான திரைப்படம் இல்லையெனினும் காணக்கூடியதே. இதுவரை எந்த மலையாளப்படமும் என்னை ஏமாற்றாமல் மனநிறைவைத் தந்துள்ளன. இதுவும் கூட.

பாலியல் வன்முறை பிற குற்றங்களும் தண்டனைகளும் :

தருண் தேஜ்பால் அல்லது நரேந்திர மோடி உளவு பார்த்தது மாதிரியான விவகாரங்களில் பாலியல் வன்முறையை எதிர்ப்பது என்பதைக் காட்டிலும் தத்தமது எதிரிகள் பாலியல் வன்முறையில் ஈடுபட்டால் மட்டுமே பெண்களுக்கு ஆதரவாகப் பேசுவதும் தான் போற்றும் தலைவரோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களோ ஈடுபட்டால் கள்ள மௌனம் காப்பதுதான் தெரிகிறது. பாலியல் ரீதியான வன்முறைகள், அணுகுமுறைகள் தவறு என்பதைக் காட்டிலும் யார் செய்கிறார்கள் என்பதில்தான் எதிர்ப்பும் ஆதரவும் வெளிவருகிறது. மாட்டியது தெஹல்கா ஆசிரியர் என்றதும்தான் பல பேர் பெண்ணியவாதிகள் என்பதே தெரியவருகிறது. 

பெண்களைக் கிண்டல் செய்ததற்காக. என்னுடைய அலுவலகத்தில் மூன்று பேர் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள்  மூன்றில் ஒருவர் Team Lead. அவர் தனது கீழே இருப்பவர்களைக் கண்டிக்காத குற்றத்துக்காகவும் அவர்களை காப்பாற்றும் நோக்கில் பேசியதாலும் அவரும் நீக்கப்பட்டார். அவர் அச்செயலில் ஈடுபடாத போதும் அவரை நீக்குவதற்கான கெடுவாய்ப்புகள் ஏற்கெனவே அவரது முந்தைய நடவடிக்கைகளிலிருந்து  இருந்தன. 

அலுவலகம் முழுவதும் இதைப் பற்றிப் பேசினார்கள். அவர்கள் செய்தது தவறு என்ற ரீதியில் சிலர் மட்டுமே பேசினார்கள் மற்றவர்கள் யாருக்கும் தெரியாமல் செய்திருக்கலாம் என்ற ரீதியில்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆக இவர்களுக்கெல்லாம் இது தவறு என்று புரியப்போவதுமில்லை. அதனால் தண்டனைகள் இது போன்ற செயல்களுக்காவது உடனடியாக நிறைவேற்றப்படுவது குறைந்தபட்சம் அச்சத்தையாவது வரவழைக்கும். Eve Teasing  என்பது ஆண்கள் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட இயல்பான செயலாகவே பேசப்படுகிறது. அது தவறே இல்லை என்பது போல்தான் எல்லாரும் நடந்து கொள்கிறார்கள். ஒருவர் அதனை செய்யாதவராயினும் கூட இருப்பவர்களால் அவரும் சேர்ந்து பாதிக்கப்படுவது நடக்கிறது.  பாலியன் வன்முறையும் கிட்டத்தட்ட அதே போலத்தான். தருண் தெஜ்பால், ஏ. கே கங்குலி என பெரிய கண்ணியவான்கள், கனவான்கள் எல்லோரும் கை நனைத்தவர்களாகவே இருப்பதைப் பார்த்தால் ஒரு ஆண் கூட நம்பத்தக்கவன் அல்ல என்றே தோன்றும்.

கோவையில் தன் மனைவி இறந்து விட்டதாகக் காட்ட தன்னிடம் வந்த ஒரு பெண்ணைக் கொலை செய்த வழக்கறிஞர் ஒருவரை கோவளத்தில் வைத்துப் பிடித்திருக்கிறார்கள். அதைப்பற்றி ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவருக்குத் தெரிந்த ஒருவன் பேசியதாகக் கூறினார். சில பத்தாயிரங்கள் தந்தால் கொலை செய்வதற்குத் தயாராக இருப்பதாக ஒருவன் சர்வ சாதரணமாகப் பேசினான், பணத்தைக் கொடு நான் போட்டுத் தள்ளிட்டு கொஞ்ச நாள் தலை மறைவாக இருந்து விட்டு பின்பு சரணடந்து விடுகிறேன். நீ ஜாமீனில் எடுத்து விடு என்றானாம். சட்டத்தின் மீது குடிமகனுக்கு எவ்வளவு அச்சமும் மதிப்பும் என்று அதிர்ச்சியாக இருந்தது. இப்படி பணத்துக்காக ஒவ்வொருவனும் கொலை செய்ய ஆயத்தமானால் என்னவாகும் இந்த  நாடு என்று தோன்றியது. :((((

தமிழகத்தின் மீதான ஓர வஞ்சனை:

ஒரிரு மாதங்களுக்கு முன்பு குங்குமத்தில் ஒரு கட்டுரையை வாசித்தேன். ஒரு செயற்கைக்கோள் ஆய்வு நிலையம் அமைக்கும்படியான இடம் தமிழகத்தில் இருப்பதாகவும், அதன் மூலம் குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புக்கள் உருவாக்கும்படியுமான திட்டம் எனினும் அது இந்திய வானியல் ஆராய்ச்சி மையத்தின் மலையாளிகள் ஆதிக்கத்தின் காரணமாக தமிழ்நாட்டுக்கு வருவது தடுக்கப்பட்டது என்பதாகவும் படித்தேன். 


கெயில் என்ற நிறுவனத்தின் பங்குகள் 57% நடுவண் அரசினுடையவை என்று இத்தகவல் கூறுகிறது. இதன் மூலம் இந்திய அரசு எத்தகையது என்பதை முடிவு செய்து கொள்ளலாம். 

https://www.facebook.com/photo.php?fbid=667286226636854&set=a.320897871275693.79991.236784116353736&type=1&relevant_count=1



அடுத்தது தமிழ் நாட்டிற்கான வளர்ச்சித் திட்டத்தைப் பாருங்கள். 



https://www.facebook.com/photo.php?fbid=314274975379746&set=a.278920168915227.1073741825.278864095587501&type=1

https://www.facebook.com/deltamethane
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

இவர்கள் இப்படித்தான் - எப்போது திருந்துவார்கள் ?

எங்கள் ஊரில் இப்போதுதான் சாக்கடையைக் கட்டியிருக்கிறார்கள். இன்னும் ஈரம் கூடக்காயவில்லை. தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. வரிசையாகக் கடைகள் இருக்கின்றன. எந்தவொரு கடையிலிருந்தும் முதலடி வெளியே வைத்தால் சாக்கடைக் கால்வாய்தான். இதையே சௌகரியமாக எடுத்துக் கொண்டு கடையிலிருக்கும் குப்பையையெல்லாம் கூட்டி சாக்கடையிலேயே கொட்டுகிறார்கள் அல்லது கடையிலிருந்து கூட்டி வெளியே தள்ளி விட்டால் அது நேராக சாக்கடைக் கால்வாயிலேயே விழுகிறது. கடைகள் என்றாலே எத்தனைகுப்பைகள் சேரும் என்று சொல்லவேண்டியதில்லை. இப்படி இருந்தால் எப்படி சாக்கடை நீர் போகும் என்று தெரியவில்லை. வீடுகளிலிருந்து குப்பையைக் கட்டி வெளியே வீசுகிற சிலரும் சாக்கடைக் கால்வாயிலேயே வீசுகிறார்கள். இன்னும் சில தெய்வங்களுக்கு தண்ணீர் தேங்கி நின்றாலே அல்லது சாக்கடையைப் பார்த்தாலே பத்து நாள் சேமித்த எச்சிலைக் காறித் துப்பாமல் இருக்க முடியாது. அதைத் தூய்மை செய்பவன் ஒரு மனிதன் என்று நினைத்தால்தானே. அங்கே வீசக் கூடாது என்று தெரியாதா இல்லை குப்பையை நடந்து போய் கொட்டுவது கௌரவக் குறைச்சல், நிக்கற இடத்திலிருந்தே விட்டெறிவதுதான் ஸ்டைல். குப்பையை கைகளால்தான் மனிதர்கள் அள்ளிச் செல்கின்றனர். அதில் எச்சில் துப்பக் கூடாது என்பதற்கெல்லாம் பெரிய மகாத்மா மாதிரி சிந்திக்கிறவர் மட்டுமே செய்ய வேண்டுமா ? அதான் நமக்கெல்லாம் தெரியாதே. அதே போல் பொதுக்கழிவறைக்குச் சென்றால் தண்ணீர் ஊற்றாமல் வருவது, ஃபளஷ் செய்யாமல் வருவது, சிறுநீர் கழிக்குமிடத்து பபிள் கம்மை துப்பி வைப்பது,(ஆமா எதுக்கு ஒண்ணுக்குப் போகும்போது அடுத்தவனுடையதை எட்டிப் பாக்கறது - தேசியப்பழக்கம்), பின்பு கழிவு நீர் தேங்கி நாறினால் அரசாங்கத்தைத் திட்டுவது, துபாயைப்பார் அமெரிக்காவைப் பார் என்று கத்த வேண்டியது.  இந்த பழக்கத்தையெல்லாம் எப்படி மாற்றுவது.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

வாசிப்பு - கமலின் கலப்படங்கள்


எனக்கு மிகவும் பிடித்த நடிகர் கமல்ஹாசன். கமலின் ரசிகர்களைப் போலவே அவர் குறித்த உண்மைகள் தெரியாத வரையில் அவர் எனக்கொரு அதிசயமாகவே இருந்தார். சகலகலா வல்லவர் என்ற பிம்பம் அவரைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்தாலும் அது எந்தளவுக்கு உண்மை என்பது அவர் பல படங்களின் கதைகளையும், காட்சிகளையும் திருடி அல்லது தழுவி எடுத்திருப்பதைக் கொண்டு முடிவு செய்து கொள்ளலாம்.  அதை செய்ததற்காக அவர் வெட்கமோ வருத்தமோ அடையவில்லை. ஒரு முறை பேட்டியில் கூறினார் எனது சிப்பிக்குள் முத்து திரைப்படத்திலிருந்துதான் ஃபாரஸ்ட் கம்ப் என்ற படத்தை எடுத்தார்கள் (உண்மையா ?). நாம் அவர்களிடமிருந்து காப்பியடிக்கிறோம், அவர்கள் நம்மிடமிருந்து அடிக்கிறார்கள் என்று சொன்னார்.

அவர் மீதான போலிக் கற்பிதங்கள் உடைந்தும் பிரமிப்புகள் அகன்ற பின்னும், அவரது கவிதைகள், வசனங்களில் வரும் சிறிய நகைச்சுவைத் துணுக்குகள் என்று பல விடயங்களில் இன்னும் கமல்ஹாசனை எனக்குப் பிடிக்கத்தான் செய்கிறது. மகனை மட்டும் திரைப்படத்தில் களமிறக்கி விடுவது, மகள் என்றால் மணமுடித்துக் கொடுப்பது என்றிருக்கும் நிலையில் தனது மகளையும் திரைத்துறைக்கு அனுமதிக்கும் துணிச்சலும் நேர்மையும் உள்ள சில நடிகர்களில் கமலும் ஒருவர். நடிகன் என்பதைத் தாண்டி, பாடல், கதை, வசனம், இயக்கம் என்று மற்ற இடங்களிலும் தனது முத்திரையைப்பதித்தவர். யாரென்றாலும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. அதுவும் கலைஞன், படைப்பாளி என்றால் விமர்சனம் நேர்மையென்றால் ஏற்றுக் கொண்டு மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும் அதுதான் அழகு. என்ன நமக்குப் பிடித்தவர் என்பதால் விமர்சனம், உண்மை எல்லாம் கசக்கத்தான் செய்யும்.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த போது சொன்னார். "எனது பெயரைச் சொல்லும்போது பத்மஸ்ரீ கமல் என்று சொல்லாதீர்கள், பத்மஸ்ரீ  விருது வாங்கியவர்கள் அதை பெயருடன் இணைத்துப் பயன்படுத்தக்கூடாது என்று விருது வாங்கியவர்களுக்கு அறிக்கை அனுப்பியிருக்கிறார்கள்". இதே கமல்தான் தனது பெயருக்கும் முன்பு உலகநாயகன் என்றும் மனசாட்சியில்லாமல் போட்டுக்கொண்டிருக்கிறார். இந்தப் பெயருக்கு நிச்சயம் தகுதியில்லாதவரே.

உலகத் திரைப்படங்களிலின் கதைகளை எடுத்து தனது பெயரில் போட்டுக் கொள்வது, அதை மற்றவர்கள் புகழ்வதை ஏற்றுக் கொள்வது என்ன வகையான மனநிலை என்பது தெரியவில்லை. குறைந்த பட்சம் நன்றி கூட எழுத்துப்பூர்வமாகப் போடாமல் தனது பெயரில் போட்டுக் கொள்வதெல்லாம்.... !!

கமல்ஹாசனை யாருக்கெல்லாம் பிடிக்கிறது, யாருக்கெல்லாம் பிடிக்காது. பிடித்தவர்களை விட பிடிக்காதவர்கள்தான் அதிகமிருப்பார்கள். கடவுள் இல்லையென்று சொல்வதால் பிடிக்காது, உதட்டு முத்தம் கொடுப்பதால் பிடிக்காது. இந்து மதத்தை கிண்டல் செய்வதால் பிடிக்காது. இஸ்லாமியர் மீதான காழ்ப்புச் சித்தரிப்புகளால் அவர்களுக்குப் பிடிக்காது. திருமணமின்றி இணைந்து வாழ்வதால் பிடிக்காது. இதில் சில பிடிக்காதுகள் அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவர் மீதான தனிநபர் வெறுப்பிலிருந்து வருவதால் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதவேண்டியதில்லை. அதெல்லாம் மனநோயாளிகள் பிதற்றல் என்று கடந்து விடலாம்.

ஆனால் அவர் மீது அறிவாளர் (Intellectual) முத்திரை குத்தப்படுவதால், பிம்பம் கட்டமைக்கப்படுவதால் அவர் மீதான கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். தரமான படங்கள், உலகத்தரத்தில் திரைப்படம் என்றெல்லாம் அவரே முன்னிலைப்படுத்திக் கொண்ட கருத்து என்பதால் இன்னும் அவசியமாகிறது. 

கமலின் கலைலப்படங்கள்
 
கமல் மீதான நேர்மையான, அதே நேரம் மிகவும் கடுமையான, எள்ளலும் நிறைந்த விமர்சனத்துடன் ஒரு நூலைப் படிக்க நேர்ந்தது. கமலின் கலப்படங்கள் என்ற இந்த நூலை இப்போதுதான் படித்தேன், மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. 


தமிழில் தரமான படங்கள் வரவேண்டும் என்று விரும்பும் அனைவருக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதை எழுதியவர் B.R. மகாதேவன். இவர் இந்த நூலுக்கு முன்பே மூன்று நூல்களை எழுதியுள்ளார். அவையும் திரைப்படக் கலைஞர்கள், படைப்புகளின் மேல் வைக்கப்பட்ட விமர்சனங்களே என்று தெரிய வருகிறது. ஒரு திரைப்படத்தைத் விமர்சனம் செய்ததோடு அல்லாமல் அந்தத் திரைப்படம் இப்படி இருந்திருக்கலாம் என்று அதற்கு மாற்றான கதையையும் இவர் எழுதியிருக்கிறார்.

கமல் நடிப்பு மட்டுமல்லாமல், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் என்று பங்களிப்பு செய்த திரைப்படங்களான, ஹேராம், விருமாண்டி, தேவர் மகன், அன்பே சிவம், குணா, குருதிப் புனல் ஆகிய ஆறு படங்களின் விமர்சனத்தையும், அப்படங்களுக்கு தான் திரைக்கதையாசிரியராக இருந்திருந்தால் எப்படி எழுதியிருப்பேன் என்றும் ஒரு கதையையும் சில காட்சிகளையும் சற்றே மாற்றியும் எழுதியிருப்பது சிறப்பாக இருக்கிறது. அட  இப்படியும் கூட எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே. என்ற ஏக்கமும் தோன்றுகிறது.

உதாரணத்திற்கு

விருமாண்டி படத்தில் நெப்போலியன் எதிரியிடம் தனியாகப்போய் மாட்டிக் கொண்டும், கையில் துப்பாக்கியிருந்து அரிவாளுடன் இருப்பவனை சுடுவார், அடுத்த தோட்டாவை லோட் செய்வதற்குள் பசுபதி வெட்டிக் கொன்று விடுவார். கையில் இருக்கும் துப்பாக்கியை வைத்துக் கொண்டு  அரிவாள் வைத்திருப்பவனிடம் மாட்டிக் கொள்வதா ? துப்பாக்கியை வைத்து மிரட்டியிருக்கலாமே ... என்று ஒரு காட்சியில் இருக்கும் அபத்தத்தை விமர்சிப்பது முதல்

ஒரு தீவிரவாத இயக்கத்தின் தலைவனே காவல்துறையின் கைதியாக  இருக்கும்போதும், இரண்டாம் நிலையில் இருக்கும் தீவிரவாதிகளுக்கு அஞ்சாமல், தீவிரவாத இயக்கத்தை அழிக்கவே முடியாதா என்று குருதிப் புனலின் கதையின் அடிப்படையையே கெள்வி கேட்கும் வரையில் ..

கமல்ஹாசனின் திரைப்படங்கள் பல மொழிப் படங்களின் திருட்டு என்பதோடல்லாமல், பல இடங்களில் தமிழ்த் திரைப்படங்களின், தமிழ் நாயகர்களின் அபத்தமான வழமைகளிலிருந்து வேறுபட்டதில்லை என்று சொல்கிறது. நேற்று வந்தவர்களெல்லாம் தரமான படங்கள் கொடுக்க முடிந்தபோதும், திரைப்படத் துறையில் அரை நூற்றாண்டாக இருக்கும் கமலால் ஏன் முடியவில்லை என்றும் எண்ணத் தோன்றுகிறது.

எல்லாவகையிலும் சிறப்பாக எழுதியிருக்கிறார். ஒரு திரைப்படத்தை அல்லது கதையை எப்படிப் பார்க்க வேண்டும், விமர்சிக்க வேண்டும், அல்லது இயக்க வேண்டும் என்ற ஒரு கோணத்தை ஏற்படுத்துகிறது இந்நூல். திரைப்பட விரும்பிகள், விமர்சகர்கள் படிக்க வேண்டிய நூல். முக்கியமாக திரைப்படம் விமர்சனம் எழுதுகிறவர்கள், கமல் ரசிகர்கள் படிக்க வேண்டிய நூல்.

நூலின் பெயர்:
கமலின் கலைலப்படங்கள்
160 பக்கங்கள்
விலை ரூ 120

ஆசிரியர்
B.R. மகாதேவன்.

நிழல் வெளியீடு
ப.திருநாவுக்கரசு,
31/48, ராணி அண்ணாநகர்,
சென்னை - 600 0078
கைப்பேசி 94444-84868
மின்னஞ்சல் : arasunizhal@gmail.com

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

மெட்ராஸ் கஃபே - தமிழர்களுக்கு எதிரான விஸ்வரூபம் ?

 

மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியைக் கண்டால் ஈழப் போரை அடிப்படையாகக் கொண்ட கதைக் களம் போல் தெரிகிறது.  இந்தப் படம் முதலில் ஜாஃப்னா (Jaffna ) என்று பெயர் வைக்கப்பட்டு பின்பு மாற்றப்பட்டது. இலங்கை வரைபடத்தினைப் பின்புலமாகக் கொண்டு நிற்கும் ஜான் ஆப்ரஹாம் இந்திய உளவுத்துறை ஒற்றன். விடுதலைப் புலிகள் கடத்திச் செல்வதாகவும் காட்டுகிறார்கள். ஈழப் போரை மையமாக வைத்து, இந்திய உளவுத்துறையின் நாதாரித்தனத்தை நாயகத்தனமாக சித்தரிக்கும் திரைப்படமாக இருக்கும் போல் தெரிகிறது. கிளுகிளுப்புக்காக ஆங்கிலப் படத்தின் பாணியிலேயே ஒரு பெண் நிருபரையும் சேர்த்திருக்கிறார்கள். எத்தனையோ போர் (war) படங்களைப் பார்த்திருக்கிறேன், பெரிய அளவில் வருந்த வில்லை. இப்போது ஈழப்போரைப் பின்னனியாகக் கொண்ட ஒர் சண்டைப் படம் வருகிறது அதிலும் இந்திய உளவாளியை நாயகனாகக் கொண்டு எனும்போது உலகமகா எரிச்சலாகவும் வேதனையாகவும் இருக்கிறது. இப்படித்தானே அந்தந்தப் போரைப் பின்னனியாகக் கொண்ட ஒவ்வொருவருக்கும் தங்கள் நாட்டைப் பற்றிய ஹாலிவுட் படங்களைப் பார்க்கும்போது இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

ஒசாமா பின் லேடனைக் கொல்வதற்கு ஏதோ ஒரு கருவியைக் கண்டுபிடித்தார் என்பதற்காக ஒரு தமிழரைப் புகழ்கிறார்கள். ஈழப்போரை நடத்தியது இந்தியாதான் என்று தெரிந்த பின்னும் இன்னும் இந்தியாவை விடாமல் நம்புகிறார்கள் ஈழத்தமிழர்கள் சிலர். மிச்சமிருக்கும் சில லட்சம் தமிழர்களை இந்தியா கொன்றாலும் அவர்கள் இந்தியாவின் புகழ் பாடிக் கொண்டிருப்பார்கள். நம்மைப் போன்றவர்களால்தான் அதை சகிக்க முடிய வில்லை. அத்தகைய தமிழர்கள் மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை எப்படி எதிர்ப்பார்கள் அவர்கள் இந்தியாவையும் நம்புகிறவர்கள் அமெரிக்காவையும் ஆதரிப்பவர்களாயிற்றே ?!

எட்வர்ட் ஸ்னோடன், பிராட்லி மானிங்க், அஸாஞ்ஜே என பலரும் அமெரிக்காவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியும் அமெரிக்காவின் ஆதரவை வேண்டித் தமிழர்கள் காத்திருக்கிறார்கள். ஒசாமா பின் லேடனைக் கொல்லவும் அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகின்றனர். ஆனால் அமெரிக்காவோ அதற்கு நன்றியாக தமிழர்களுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக தமிழரை அழித்த சிங்களப் பேரினவாத பயங்கரவாத ராணுவத்தினருடன் ராணுவக் கூட்டுப் பயிற்சி நடத்துகிறது. தமிழர்களின் ஒரே நம்பிக்கையான இந்தியா இன்னும் அகதிகளைக் கூட அவமானப்படுத்தியே வருகிறது.

திரிகோணமலையில் சிங்கள - அமெரிக்க ராணுவத்தினர் பயிற்சி
விஸ்வரூபம் படத்தை முஸ்லிம்கள் எதிர்த்தது ஏனென்றால் அது இஸ்லாமியரைப் புண்படுத்தியது, தாலிபன்களைத் தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது. அமெரிக்காவைப் புகழ்கிறது. அவ்விவகாரத்தில் எனக்கு இப்போதும் அதே நிலைப்பாடுதான். இஸ்லாமியர்களின் தம்மை தீவிரவாதியாக சித்தரிப்பதையும், ஆப்கானியர்களைத் தீவிரவாதியாகவும் அமெரிக்கனை யோக்கியனாகக் காட்டுவதாகவும் எதிர்த்தது நியாயமானதே. 30 வருடங்களாக வல்லரசு நாடுகளின் ராணுவ ஆக்ரமிப்பால் 2 மில்லியன் ஆப்கானியர்கள் கொல்லப்பட்டும், பலர் ஊனமுற்றும், அகதியாகவும் அலைகின்றனர். இதை கேவலப்படுத்தி அமெரிக்காவை ஆப்கானியத் தீவிரவாதிகள் வைக்கும் குண்டு வெடிப்பிலிருந்து காக்கும் அமெரிக்காவைப் போற்றும் படமாகவும் அமெரிக்காவால் ராணுவ ஆக்ரமிப்புக்குள்ளாகியிருக்கும் ஆப்கானியரைக் கேவலமாகவும் காட்டி இருப்பதை எதிர்ப்பது நியாயமானது. ஆனால் இஸ்லாத்தை இழிவு செய்கிறது, இஸ்லாமியரைப் புண்படுத்துகிறது, என்று மத உணர்வு ரீதியாக எதிர்த்துப் படத்தையே தடை செய்யக் கேட்டது தவறே.

விஸ்வரூபம் பற்றிய பதிவில் இஸ்லாமியரின் எதிர்ப்பை கொச்சைப்படுத்துகிற தமிழர்களுக்கு என்று நான் எழுதியது இதுதான், //இப்போது கற்பனையாக, விஸ்வரூபம் படத்திற்கு பதிலாக மலையாள இயக்குநரின் ஒரு பாலிவுட் படம் கமலுக்குப் பதிலாக சல்மானும் அமெரிக்க இராணுவத்திற்குப் பதிலாக இந்திய அமைதிகாக்கும் ராணுவம், தாலிபனுக்கு பதிலாக புலிகள், ஆப்கனுக்குப் பதிலாக ஈழத்தை ஆகிரமிக்கிற கதைக்களன், "இந்திய ராணுவம் பெண்களை பாலியல் வன்முறை செய்யாது" என்று ஒரு ஈழத்தமிழன் பேசுகிற மாதிரி வசனமும் வைத்து இருந்தால் நாம் எதிர்ப்போமா மாட்டோமா ? // அது இப்போது மெட்ராஸ் கஃபே வடிவில் ராணுவத்திற்குப் பதிலாக உளவாளியாக மாறி  சிறு அளவில் உண்மையாகி விட்டது.

இந்த மெட்ராஸ் கஃபே படமும் இந்தியாவை யோக்கிய சிகாமணியாகக் காட்டப்போகிறது. இரு தரப்பும் இலங்கையில் போர் புரிந்தனர் என்று பார்ப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் ரசிகர்கள். இந்தியாவிலிருந்து போய் இலங்கையில் நாடு கேட்டால் அவன் சும்மாயிருப்பானா, ராஜீவைக் கொன்ற தீவிரவாதிகளுக்கு இதுதான் சரியான தண்டனை  என்று முற்றுமறிந்த ரசிக சிகாமணிகள் வக்கனை பேசுவார்கள். இந்திய உளவுத்துறை அதிகாரி உயிரைப் பணயம் வைத்து என்ன சாகசம் செய்யப் போகிறாரோ தெரியவில்லை. 

விடுதலைப் புலிகளைத் தீவிரவாதிகளாகவும், இந்திய உளவுத்துறை அதிகாரியை கடத்துவதாகவும் காட்டியிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல போராளிகளே, இந்திய உளவுத் துறையினரைக் கடத்த மாட்டார்கள் அவர்கள் இந்தியாவின் நண்பர்கள் என்றெல்லாம் சொல்லி அப்படத்தைத் தடை செய்யச் சொல்லி விளம்பரம் தேட மாட்டார்கள் "தமிழர்கள்"  என்று நம்புகிறேன்.

படம் வெளியான பின்பு திரைப்படத் திறனாய்வு (விமர்சனம்) எழுதும் வலைப்பதிவர்கள் இப்படத்தைக் கிழித்துத் தொங்கவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஹாலிவுட் படங்களில் ராம்போ, ஜேம்ஸ்பாண்ட், மிஷன் இம்பாஸிபிள், இன்னும் பல ராணுவத்தின் பெருமைகளை பீற்றிக் கொள்ளும் படங்கள்  உளவுத்துறை அமெரிக்காவின் பெருமை சொல்பவை. இப்படங்களைப் பார்ப்பவர்கள் உலகிலேயே ஜனநாயகத்திற்காக உயிரைக் கொடுத்துப் போராடுகிறவர்கள் அமெரிக்க ராணுவத்தினர்கள், சிஐஏ எஜென்ட்கள் ஆகியோர்கள் என்றுதான் நம்புவார்கள். நானும் அப்படித்தான் நம்பினேன். நம் இந்தியப் படங்களில் ராணுவத்தை, காவல்துறையை வைத்து போலி தேசபக்தியைத் தூண்டும் படங்கள் எடுக்கப்படுகின்றதுன . இப்போது டான்கள், கேங்ஸ்டர்கள், மாஃபியாக்கள் போன்ற அயோக்கியர்களை நாயகர்களாகக் காட்டும் இந்தியப் படங்கள் வருகின்றன. அதே போல் உளவுத்துறை,  உளவாளிகள் செய்யும் சாகசங்கள் வரத் தொடங்கி விட்டன. ஏஜென்ட் வினோத், கமோன்டோ, ஏக் தா டைகர்  ஆகியன எடுத்துக்காட்டுகள். அடுத்ததாக இந்த மெட்ராஸ் கஃபே. இந்த உளவுத்துறையினர் எனப்படுகிறவர்கள், இறையாண்மையுடைய இன்னொரு நாட்டுக்குள் புகுந்து அந்நாட்டிற்கெதிரான பாதுகாப்புக்கெதிரான நடவடிக்கையில் ஈடுபடுகிறவர்கள். இறையாண்மையுடைய இலங்கையில் இந்தியா தலையிடாது என்று சொன்னார்கள்.  வாய்கிழியப் பேசினார்கள். இப்போது இந்திய உளவாளியை இலங்கைக்கு அனுப்புவது இலங்கை என்ற நட்பு நாட்டிற்குச் செய்யும் துரோகம். எனவே இந்த இயக்குநர் இந்தியாவை கேவலப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இன்னொரு கோணத்தில் பார்த்தால், உளவாளியை அனுப்பி வீரதீர சாகசத்திற்கெல்லாம் இடம் கொடாமல் இலங்கை அரசு இந்திய அரசு மிகச் சிறந்த நட்பு நாடுகளாகவே இருக்கின்றன.பார்ப்போம்.

விடுதலைப் புலிகளுக்குள் ஊடுருவும் இந்திய உளவாளி என்று இத்திரைப்படம் விமர்சிக்கப்படுகிறது. இதில் ஒன்றும் நடக்காததல்ல. புலிகள் உட்பட அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களும் இந்திய உளவுத்துறையால், இஸ்ரேலிய உளவுத்துறையால்  பயிற்றுவிக்கப்பட்டவர்களே , அது போல் உலகெங்கும் உள்ள் இஸ்லாமிய இயக்கங்களும் அமெரிக்க உளவுத்துறையால் பயிற்றுவிக்கப்பட்டவர்களே. இவ்வியக்கங்களுக்குள் பல உளவாளிகள் ஊடுருவி போராட்டங்களுக்கு உலை வைத்ததும் ஈழம் வரை நடந்த வரலாறு. இதிலெல்லாம் எதிர்ப்பதற்கு என்ன இருக்கிறது ? ஒரு வேளை இப்போது நாம் எதிர்பார்ப்பது போல இந்திய உளவாளி புலிகளுக்குள் ஊடுருவி ரகசியங்களைக் கறந்து வருவது போலவோ அல்லது பணயக் கைதிகளை மீட்பது போலவோ இருந்தால் நாம் என்னவென்று அதைப் புரிந்து கொள்வது ? இந்திய உளவுத்துறை என்ன செய்யுமோ அல்லது செய்ததோ அதைத்தான் கொஞ்சம் திரைப்பட மசாலாத்தனத்துடன் வேறுவிதமாக படம் காட்டியிருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டியதுதான். என்ன சிங்கள ராணுவம் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யும் மனிதாபிமான உதவிகள் படத்தில் வரும் அதை சகித்துக் கொள்ள வேண்டும்.

என்ன இதனால் சங்கடப் படப் போகிறவர்கள் இந்தியாவை நம்பிக் கொண்டிருப்பவர்கள்தான். எனக்கு இதையெல்லாம் கேட்டு சலித்து விட்டது. 

அமெரிக்காவில் அமெரிக்க அரசை விமர்சித்துக் கூட ஹாலிவுட் படம் எடுக்க முடியும். அத்தகைய சுதந்திரம் இந்தியாவில் இல்லை. ரசிகர்களும் அவ்வளவும் பக்குவமானவர்கள் இல்லை. இந்திய இயக்குநர்கள் படமெடுத்தால் இந்தியாவின் பங்கை மறைப்பார்கள், தமிழர்கள் எடுத்தால் புலிகளின் தவறுகளை மறைப்பார்கள். இந்திய அரசை விமர்சித்துப் படமெடுத்தால் படம் தடை செய்யப்படும். புலிகளைப் பற்றி எடுத்தால் தமிழர்கள் எதிர்ப்பார்கள். நடுநிலையுடன் நேர்மையாக படம் எடுக்க இங்கு சூழ்நிலையோ ஆட்களோ இல்லை. தமிழர்கள் இதைத் தடை செய்யக் கோரினால் நமக்குத்தான் கெட்ட பெயர் உண்டாகும். சீமான்களை நினைத்தால்தான் கொஞ்சம் பயமாக இருக்கிறது.

இஸ்லாமியர் ஏன் திரைப்படங்களில் தவறாக சித்தரிக்கப் படுவதை எதிர்க்கின்றனர் என்று இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். அதே போல் தடை செய்ய வேண்டும், வெளியிட வேண்டாம் என்று முரட்டுத்தனமாக செயல்படுவதால் என்ன நேர்ந்தது என்றும் அவர்களிடமிருந்தே தெரிந்தும் கொள்ளலாம். தமிழர்களை இனவெறியர்களாகக் காட்டுவதற்கு வட இந்திய ஆங்கில ஊடகங்களும், சோ ராமசாமிகளும், சுப்ரமணிய சாமிகளும் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

நினைவோடையில் நிலையான தடம் பதித்தவளுக்கு

நேற்றைக்கு என் கண்ணில் பட்டுவிட்ட உன்
பழைய புகைப்படம் என் மீண்டும் அசைத்து விட்டது

இன்று போலவே அன்றும் நான் இயல்பாக இருப்பதாகவே நம்பினேன் அன்று என் நடிப்பை பொய்யென்றுணர்த்த நீயிருந்தாய் 
இன்று என் கண்ணீர் இருக்கிறது

உன்னைக் கடக்கும் சில விநாடிகளில் வழிப்போக்கனாய் சென்றிடவே முயன்றேன் 
உனக்காகவே வழியை மாற்றிவிட்ட வாடிக்கையாளனானேன்

ஒருவர் காணாத போது மற்றவரை இருவரும் பார்த்துக் கொண்டோம் 

பார்வைகள் மோதி நீ என்னிடமும் நான் உன்னிடமும் பிடிபட்டோம் வலிந்து புன்னகைத்தோம் 

தோள்குலுக்கி மழுப்பினோம் வெட்கினோம் மகிழ்ந்தும் கொண்டோம்

நீ அழகாக இல்லாமலிருந்தது எனக்குப் பிடித்திருந்தது
அப்போதுதானே நானுனக்குப் பொருந்துவேனென்றோர் மனக்கணக்கு

பின்பு நீ மட்டுமே அழகென்று நினைக்கத் தொடங்கியதில் ஆச்சரியமில்லை புதுமையுமில்லை

நாளும் பேசவேண்டியதை ஒத்திகை பார்ப்பதும்
ஒரு முறையாவது உன்னை சிரிக்க வைப்பதும் இலட்சியமானது

நீ பேசியதை தனிமையில் பலமுறை பேசிப்பார்ப்பது கடமையானது

காற்றின் புண்ணியத்தால் எனது வெள்ளை முடிகளைக் கண்டுபிடித்து விட்டாய் !  பிடிக்க வில்லை என்றாய்
தாடியும் வெளுத்ததைக் காணாததை எண்ணி சிறு நிம்மதியடைந்தேன்

உன் முதல் காதல் தோல்வியை என்னிடம் பகிர்ந்து கொண்டபோது

உன்னிடம் அதிகம் நெருங்கி விட்டதாய் உணர்ந்தேன்
உன்னால் நேசிக்கப்பட்டவன் மேல் பொறாமை கொண்டேன்

உன் கண்ணீருக்குக் காரணமென ஆற்றாமை கொண்டேன்
அவன் விலகியதாலேயே நீ எனக்குக் கிடைத்தாய் என அமைதியானேன்

மனம் வானில் கோட்டை கட்டிக் கொண்டிருக்க
எதார்த்தமோ மாறாக 

எல்லாக் காதலும் பிரியக் காரணமான அதே காரணத்தை எதிர் கொள்ளத் தலைப்பட்டோம்

சொல்ல முடியாத நிலையில் நானிருந்ததை நீயும்
ஏற்க முடியாத நிலையில் நீயிருந்ததை நானும்
உணர்ந்தேயிருந்தோம்

உனக்குமெனக்குமிடையில் நினைவுகளின் துணையுடன் இடைவெளிகளிட்டு நிரப்பினோம்

இன்றும் நம்மை அது இணைத்தும் வைத்திருக்கிறது
சிறு இடைவெளியுடன்

எழுதும்போதும் நினைக்கும்போதும் ஊற்றெடுக்கும் கண்ணீர் உன் நினைவுகளை கழுவிச் செல்லாது என்று நம்பிக்கையுடன்

கண்ணீரின் வெப்பத்தை ரசிக்கிறேன்
அது எனக்குப் பிடித்திருக்கிறது
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

நீ என் நிறைவேறாத கனவு


உன் புகைப்படத்தைக் காண்கின்ற போதெல்லாம் 
ரசிக்க முடியாத கவிதை ஒன்றை எழுதி வைக்கிறேன்
ஓவியமாக உன்னை தீட்ட முனைந்து தோல்வியுறுகிறேன்
உன்னுடன் இருந்த சில விநாடிகளை பலமுறை நினைத்து
மீண்டும் வாழ்வதாக நினைத்துக் கொள்கிறேன்
அந்த தருணங்களின் இனிமையில் மூழ்குகிறேன்
உன் நினைவூட்டும் அழகிய வெறுமை உணர்வை 

மீண்டும் எதிர்நோக்கியே எனது தனிமையைக் கொண்டாடுகிறேன்
ஒரு முறை அழுது தீர்த்துவிட்டு மறக்கலாம் என்று நினைக்கிறேன்
மறந்து விடலாம் என்று மீண்டும் நினைக்கிறேன்
மீண்டும்
மீண்டும் உன்னையே நினைக்கிறேன்
 நீ என் நிறைவேறாத கனவு 
நினைத்து  மட்டும் பார்க்க முடிந்த நினைவு 

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

சிற்றரசு, இளவரசன் மற்றும் பலர் :((

இப்போது இளவரசன் தற்கொலை செய்துவிட்டதால் எனக்கு பெரிய துக்கமோ, அதிர்ச்சியோ ஏற்படவில்லை. ஒவ்வொரு நாளும் ஜாதியப்பேச்சுக்களையும், சடங்குகளையும் இன்ன பிற எழவுகளையும் வேறு வழியின்றி சகித்துக் கொள்ளாமல் ஏற்றுக் கொண்டு நடக்க வேண்டிய கட்டாயத்திலிருப்பவன். ஜாதிக்கு எதிராக எதையும் இது வரையில் செய்ததில்லை. அதனால் இது போன்ற நிகழ்வுகள் இப்படியும் இருப்பார்களா ஜாதி வெறிபிடித்த மனிதர்கள் என்று அதிர்வதில்லை. ஜாதி வெறி பிடித்தவர்கள் நினைப்பதை விடவும் மோசமானவர்கள்.

அவர்களுக்கு பெற்ற மகளின் உயிரை விடவும் ஜாதிக் பெருமிதம் மேன்மையானது. ஜாதியப் பெருமை என்று இல்லாதவொன்றைக் காப்பாற்றுவதாகக் கருதிக் கொண்டு கொலைகாரனாக மாறவும் துணிவு தருவதே ஜாதியம். மகள் தாலியறுத்தாலும் வாழ்க்கையே போனாலும், பரவாயில்லை என்று கருதுகிறார்கள்.

ஆதிக்க ஜாதிக்காரப் பெண் தலித்தை மணந்தால் கொலை, அதே தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் அருந்ததிய ஆணைத் திருமணம் செய்தாலும் கொலை இப்படிப்போகிறது ஜாதியத்தின் கதை. 


2008 ஆம் ஆண்டு சோமனூர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிற்றரசு என்பவர் தன்னுடன் வேலை பார்த்த தொழிலாளியான கவுண்டர் ஜாதியைச் சேர்ந்த கோமதி என்ற பெண்ணை காதலித்து எதிர்ப்புக்களுக்கிடையில் திருமணம் செய்து கொண்டார். பின்பு சில முறை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு, இறுதியாக தலை நசுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார் சிற்றரசு. அவரது மனைவியிடம் அப்போது கைக்குழந்தையும் இருந்தது. அந்தப் பெண்ணின், குழந்தையின் எதிர்கால வாழ்க்கையைக் கூட நினைத்துப் பாராமல் கொலை செய்தனர் கொங்கு வேளாளக் கவுண்டர் ஜாதிக்காரர்கள். 


இப்போது இளவரசன்  பல்வேறு பிரச்சனைகளால் மன அழுத்தத்திற்குள்ளாக்கப்பட்டு தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். (இது தற்கொலை என்று இன்னும் நான் நம்பவில்லை என்ற போதிலும்) இவருக்கும் திருமணமாகிவிட்டது என்ற போதிலும் காதலர்களைப் பிரிப்பதில் ஜாதி வென்று விட்டது. ஜாதியத்தால் கொலையுண்டவர்களில் இவர்களிருவரும் அதிகமான குற்றவுணர்ச்சியையும், பாதிப்பையும் ஏற்படுத்தினர். 


 தற்கொலையாகட்டும், கொலையாகட்டும் ஜாதியம்தான் காரணமாக இருக்கிறது. ஆதிக்க ஜாதிக் கட்சிகளுக்கு இருக்கும் தலித்களுக்கு எதிராக குற்றம் சாட்டுவது இரண்டு காரணங்களுக்காக.

வன்கொடுமை சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது. (எதிர்த்தரப்பினர் ஆதிக்க ஜாதியாக இருக்கும் பட்சத்தில் வேறு பிரச்சனைகளுக்காக தன் மீது ஆதிக்க ஜாதிக்காரர் வன்கொடுமை செய்தார் என்று புகாரளிப்பது)

பெண்களை காதலித்து விட்டுச் சென்று, பின்பு பெற்றோரிடம் பேரம் பேசி பணம் பறிப்பது.

இது இரண்டும் உண்மைகள். இந்தக் கட்டப் பஞ்சாயத்துக்குத் துணை நிற்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர். இக்காரணங்களைக் கொண்டே வன்கொடுமை சட்டத்தை நீக்க வேண்டும் என்று ஆதிக்க ஜாதிக் கட்சியினர் கோருகின்றனர். கலப்புத் திருமணங்களை எதிர்க்க வேண்டும் சட்டம் போட வேண்டும் என்று சொல்கின்றனர். ஒரு படி மேலே போய் பெண்களுக்கு சொத்துரிமை கூடாது என்கின்றனர். இதை வைத்து ஜாதிய உணர்வைத் தூண்டி வாக்கு வங்கி அரசியலுக்கு ஆதாயம் தேடுகின்றனர். எனவே நாம் ஆதிக்க ஜாதிக் கட்சிகளையும் ஆதரிக்கக் கூடாது இந்த தலித் அடையாள அரசியல் செய்யும் தலித்  கட்சிகளையும் ஆதரிக்கக் கூடாது.

முன்பொரு முறை இதே போல் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.  வன்னிய பெண், தலித் ஆண் கலப்புமண தம்பதியர் வலுக்கட்டாயமாக நஞ்சு ஊட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர். பாமக அன்புமணி அப்போதைய நடுவண் அமைச்சராக இருந்தார். விடுதலைச் சிறுத்தைகள், பாமக ஒரே கூட்டணியில் இருந்தனர். கொல்லப்பட்ட தலித் ஆணின் தந்தை தனது மகன் கொல்லப்பட்டதற்காக வன்னியர் ஜாதி வெறியர்கள் மீது வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கைத் திரும்பப் பெறுமாறு வழக்குக் கொடுத்தவரை வற்புறுத்தினர் விசி கட்சியினர். காரணம் அவர்களிருவரும் ஒரே கூட்டணியிலிருந்தனர். இக்கொலையை முதன்முதலில் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்ததும் விடுதலைச் சிறுத்தைகள்தான். அவர்களே அதை திரும்பப் பெறக் கோரினர். இதுதான் தலித் கட்சிகளின் உண்மை முகம். (கடலூர் மாவட்டம் கண்ணகி - முருகேசன் கொலை வழக்கு)
 
தற்கொலை செய்து கொண்டதன் மூலம், நாடகத் திருமணம் என்ற அவதூறுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் இளவரசன் என்ற இளைஞன்.

காதல் என்பது பொய், பெற்றோரை ஏமாற்றும் பிள்ளைகள் என்று சாடும் பெற்றோர்களுக்கு, பெற்றோருக்கு பயந்துதானே காதலர்கள் ஓடிப்போய்த் திருமணமும், திருட்டுக் கல்யாணமும் செய்துகொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. பெற்றோர்களிடமிருந்து உயிருக்குப் பயந்தும் ஓடிப் போக வேண்டியுள்ளது.

காதலுக்காக காதலித்தவர்கள் தற்கொலை செய்கிறார்கள். காதலித்து ஜாதிப் பெருமையைக் குலைத்த காரணத்திற்காக பெற்றோர்களே பெற்ற பிள்ளையைக் கொலை செய்கிறார்கள். எது உயர்ந்தது காதலா ?  ஜாதியா ?
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

அமெரிக்க முகமூடி அம்பலமானது

அமெரிக்க எப்பேர்ப்பெற்ற குடிநாயக நாடு என்று அனைவருக்கும் தெரியும். ஜனநாயகமா இல்லை பணநாயகமா என்று தற்போது தெளிவாக அம்பலமாகி வருகிறது, இந்தியாவிலும் சிலர் இது போன்ற இணையத்தில் வெளியிட்ட கருத்துக்களுக்குக்காக கைது செய்யப்பட்டனர், ஆனால் அது அரசு என்றளவில் இல்லாமல் செல்வாக்குடைய அரசியல்வாதிகளின் அதிகார துஷ்பிரயோகத்தைப் பயன்படுத்தித்தான் கைது செய்துள்ளனர். ஆனால் அமெரிக்காவிலோ அரசே முன்னின்று இந்த இழிசெயலை நடத்தியுள்ளது. தனிநபர் உரிமைகளில் சாதனை படைத்த நாடு, யாரும் விருப்பம் போலச் செயல்பட எவ்விதத் தடையும் செய்யாத நாடு. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அப்படியான நம்பிக்கை மூட நம்பிக்கையே என்று நிரூபணமாகியுள்ளது.

அமெரிக்கா என்பது ஒரு நாடு அல்ல அது ஒரு வணிகம் ( USA is not a country it's a business ) என்று ஓர் சொல் உண்டு. அதுதான் எவ்வளவு உண்மை. அமெரிக்கா ஒரு மக்கள் அதிகாரமற்ற நாடு என்பது மீண்டுமொரு முறை நிரூபணமாகியுள்ளது. அதற்குக் காரணமானவர் எட்வர்ட் ஸ்னோடன் என்ற அமெரிக்க உளவுத்துறை ஊழியர். தனது மனசாட்சி உறுத்தலின் காரணமாக இவர் வெளியிட்ட தகவல் அமெரிக்கர்களின் கண்களைத் திறந்துள்ளது.

அமெரிக்காவின் உண்மை முகத்தை அறிந்தவர்களுக்கு இது ஒன்றும் பெரிய ஆச்சரியமாக இராது. ஆனால் அமெரிக்கக் குடிமக்கள் அல்லது அமெரிக்க குடிமக்களல்லாத அமெரிக்க ஆதரவாளர்களுக்குத்தான் இது அதிர்ச்சியாக இருந்திருக்கும். அமெரிக்காவை எதிர்ப்பது என்றால் அமெரிக்காவின் 30 கோடிப்பேரை வெறுப்பது என்று பொருள் கொள்வதெல்லாம் அவரவர் விருப்பம்.
எட்வர்ட் ஸ்னோடன்
அமெரிக்கா குறித்த எளிய உண்மை. அமெரிக்கா என்பது என்ன ? அம்மண்ணின் மைந்தர்களை ஐரோப்பிய வந்தேறிகள் இனக்கொலை செய்து ஆக்ரமித்துக் கொண்ட நிலம். அங்கே ஆப்ரிக்க அடிமைகளின் குருதியில்தான் வளர்ந்து நிற்கிறது வானுயர் கட்டிடங்கள். இதல்லாமல் இரண்டாம் உலகப்போர் தொடங்கி 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இராணுவ ஆக்ரமிப்பை நிகழ்த்தியுள்ளது. ரஷ்யா பால்டிக் நாடுகளை அச்சுறுத்த நேட்டோ என்ற ராணுவ அமைப்பையும் வைத்திருக்கிறது. 50 உலகின் பல்வேறு நாடுகளில் தனது ராணுவத் தளத்தையும் நிறுவியுள்ளது.  தனது உளவு அமைப்பின் மூலமாக பல நாடுகளின் அரசுகளைக் கவிழ்க்கவும் தனது கைப்பாவை அரசுகளைக் காக்கவும் தனது ராணுவ, தொழில்நுட்ப வலிமைகளைக் கையாள்கிறது.

ஒரு நாட்டின் அரசுக்கு எதிராக பயங்கரவாதிகளை உருவாக்கவும், அல்லது ஒரு நாட்டையே பயங்கரவாதம் என்று சொல்லி ஆக்ரமிக்கவும் செய்யும். தற்போது ஒரு எடுத்துக் காட்டு தான் ஆக்ரமித்துள்ள ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் இஸ்லாமியத் தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடுவதாகச் சொல்லும் அமெரிக்கா உள்நாட்டுப்போர் நடக்கும் சிரியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகளை ஆதரிக்கிறது. 21 ஆம் நூற்றாண்டிலும் இரண்டு நாடுகளை ராணுவ ரீதியாக ஆக்ரமித்து நிற்கிறது. 

பிராட்லி மானிங்
இப்பேர்ப்பட்ட கொடிய வெறிபிடித்த சர்வாதிகார நாட்டை ஏன் பலரும் ஆதரிக்கின்றனர். அமெரிக்காவில் இருக்கும் ஜனநாயகம் வேறெந்த நாட்டிலும் இல்லை. இது நிச்சயம் உண்மைதான். பல விடயங்களில் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத உரிமைகள் அமெரிக்கக் குடிமக்களுக்கு வாய்த்திருக்கிறது.

ஆனால் அதுவும் பொய்யென நிருபித்திருக்கிறார் ஸ்னோடன். யார் இவர் ? அமெரிக்க உளவுத்துறையான CIA - இன் ஊழியர். சொந்த அமெரிக்க மக்களையே அமெரிக்க அரசு வேவு பார்த்திருக்கிறது. சமூக வலைத்தளங்கள், இணையதளங்கள், மின்னஞ்சல் முகவரிகள்  என அனைத்தையும் வேவு பார்த்திருக்கிறது. இதைக் காணச் சகிக்காத ஸ்னோடன், இதை அம்பலப்படுத்தினார். இந்த CIA - என்பது என்ன ? அமெரிக்க உளவுத்துறை, உலகில் மற்ற நாடுகளில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நகர்வுகளையும் கவனிப்பது, அமெரிக்க நலனுக்கு எதிரான அரசியல் போக்கு உலகின் எந்த நாட்டிலாவது தென்பட்டால் அங்கே மூக்கை நுழைப்பது, உளவாளிகளை அனுப்புவது, இலஞ்சம் கொடுப்பது, கூலிப்படையை அனுப்புவது, தேவைப்பட்டால் ஆட்சிக் கவிழ்ப்புகள், படையெடுப்புகள் வரை நடக்கும். இதில் இருப்பவர்கள் மனசாட்சியை அடக்கம் செய்து விட்டுத்தான் வேலை பார்க்க வேண்டும். அடுத்தவன் பிழைப்பில் மண்ணள்ளிப் போடும் இந்த வேலையைத்தான் அமெரிக்க ஹாலிவுட் திரைப்படங்கள் நாயகர்களாகவும், தேசபற்றாகவும் சித்தரிக்கின்றன. ஹாலிவுட் படங்கள் சொல்வது உலகத்திலேயே தியாகி அமெரிக்க ராணுவ வீரன், உலகத்திலேயே சிறந்த தேசபக்தன் CIA, FBI உளவாளி.  

ஹாலிவுட் திரைப்படங்களில் பார்த்தால் மிகவும் பிரபலமான படங்களான, ஜேம்ஸ்பாண்ட் (இங்கிலாந்து உளவாளி), ராம்போ, மிசன் இம்பாஸிபிள் மாதிரியான உளவாளிகள் அல்லது ராணுவ வீரர்களை வியந்து போற்ற வைக்கும். இவர்கள் வெவ்வேறு நாடுகளில் போய் போரிடுவது அந்நாட்டுக்கு எதிராக செயல்படுவதும் வீரமாகவும், திறமையாகவும் புத்திசாலித்தனமாகவும், நாயகத்தனமாகவும் சித்தரிக்கப்படும். ராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தும் படங்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. ஈராக்கிலும், ஆப்கானிலும் அமெரிக்க ராணுவ வீரர்களின் துயரத்தை அலசும் படங்கள் (ஹார்ட் லாக்கர்) , அமெரிக்காவின் பிறநாட்டு ஆட்சிக் கவிழ்ப்பை நியாயப்படுத்தும் ஆர்கோ போன்ற படங்கள் ஆஸ்கர் விருதுகளை வெல்கின்றன. இது போன்ற படங்களை ரசிக்கும் நாமும் அறிந்தோ அறியாமலோ அமெரிக்காவின் அயோக்கியத்தனத்தை ரசித்து அதை ஆதரிக்கிறோம்.

அமெரிக்கா ஈராக்கில் நடத்திய கொடுமைகளை அம்பலமாக்கியது முதன் முதலில் விக்கிலீக்ஸ் என்ற இணையம். அதன் நிறுவனர் அமெரிக்க பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தியதால், அமெரிக்க அரசால் இன்னும் துரத்தப்பட்டு ஆபத்தான நிலையில்தான் ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சமடைந்து வாழ்கிறார். இன்னொருவர் ப்ரோட்லி மானிங் இவரும் விக்கிலீக்ஸ் க்கு தகவல்கள் - இராணுவ ரகசியத்தை வழங்கியதற்காக சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இருவரும் அமெரிக்க பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தியதற்காக தண்டனை அனுபவிக்கின்றனர். தற்போது எட்வர்ட ஸ்னோடனும் அது போலவே அமெரிக்க சராசரி மக்களைக் கண்காணிக்கும் படு கீழ்த்தரமான அமெரிக்க அரசின் செயலை அம்பலப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம் (NSA - National Security Agency) இணையக் கண்காணிப்பின் மூலம் பல்வேறு நாடுகளின் ரகசிய ஆவணங்களைத் திருடியுள்ளது. அமெரிக்கர்களின் அசைவுகளையும் கண்காணித்து வருகின்றது என்பதை அம்பலப்படுத்தி உள்ளார் எட்வர்ட்.

ஹாங்காங்கில் தஞ்சமடைந்து இதை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவுக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கும் எட்வர்ட் தற்போது ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார். அமெரிக்க அதிபரோ உலக நாடுகளையெல்லாம்  யாரும் எட்வர்ட் ஸ்னோடனுக்கு தஞ்சமளிக்கக் கூடாது என்று எச்சரித்துக் கொண்டிருக்கிறார். பலநூறு கோடிக்கணக்கான தகவல்கள் பல்வேறு நாடுகளிடமிருந்து திருடப்பட்டுள்ளன. அதிகமாகக் கண்காணிக்கப்பட்ட நாடுகளில் ஐந்தாமிடத்தில் இந்தியாவும் இருக்கிறது என்பது அதிர்ச்சி. என்ன தேசபக்தி அதிர்ச்சியெல்லாம் ஒன்றுமில்லை. இந்தியா அமெரிக்காவின் எந்த ஒரு நிலைப்பாட்டிலும் எதிர்ப்புத் தெரிவிக்காத நாடு என்று அனைவருக்கும் தெரியும் அப்படி இருந்தும் இந்தியாவையும் கண்காணித்திருக்கிறது என்பது என்ன நியாயமோ.

இதற்கு முன்பு உலகையே அதிரவைத்த அமெரிக்க போர்க்குற்றங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அஸான்ஞ்சே இன்னும் ஈக்வடார் தூதரகத்தில்தான் தஞ்சமடைந்து வாழ்கிறார். எட்வர்ட் ஸ்னோடன் ரஷ்யாவின் வானூர்தி நிலையத்திலிருக்கிறார்.

இப்படி அமெரிக்கா சொந்த மக்களையும் நட்பு நாடுகளையும் கூட கண்காணித்துக் கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்காவை ஏதோ ரட்சகனைப் போலவும் சிலர் நம்புகின்றனர். அமெரிக்க உளவுத்துறையோ பாதுகாப்புத் துறையோ பல்வேறு கண்ணுக்கு தெரியாத மென்பொருட்களை வைத்து பல்வேறு தனிநபர்கள், அரசுகள், நிறுவனங்களிடமிருந்தும் தகவல்களை ஒட்டுக் கேட்பது ஏற்கெனவே அரசல் புரசலாக வெளியான செய்திகள்தான். அரபு வசந்தம், துருக்கி வசந்தம், கிரீஸ்போராட்டம் போன்றவற்றின் தாக்கத்திற்கு முக்கியத் தூண்டுதலாய் இருந்தது சமூக வலைத்தளங்களே என்பதால் அதையும் கண்காணித்து வருகிறது என்ற செய்தியும் ஏற்கெனவே வெளியானது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் அமெரிக்கா தனிநபர் சுதந்திரத்தில் தலையிடாது என்று மூட நம்பிக்கை உடையவர்களின் கவனத்திற்கு,

சமூக வலைத்தளங்களை வெவ்வேறு போலி முகவரிகளில் வந்து விவாதங்களில் கூட பங்கெடுக்கும் பாமரர்களைப் போலவும் உளவுத் துறையினர் கண்காணிக்கின்றனர். உலகப் புகழ் பெற்ற நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக், யாஹூ ஆகியோரும் தனிநபர்களின் தகவல் பரிமாற்றங்களை வழங்கி  உதவியிருக்கின்றன.

சிவலிங்கம் சிவானந்தம் என்ற தமிழர் ஒசாமா பின்லேடனைக் கண்டுபிடித்துக் கொல்லும் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக வெள்ளை மாளிகையின் விருது பெற்றிருக்கிறார். இதைத் தமிழர்கள் கொண்டாடுகின்றனர். பின்லேடனை உருவாக்கியதே அமெரிக்காவின் சிஐஏ அவரை பயங்கரவாதி என்று அறிவித்து தேடியும், இரு நாடுகளின் மீது படையெடுத்தும், பல மில்லியன் டாலர் செல்வாக்கி அமெரிக்கப் பொருளாதாரமே நாசமாக்கியது. லேடனைத் தேடிக் கொல்வதற்கெல்லாம் தொழில் நுட்பத்தை உருவாக்கியவரெல்லாம் தமிழருக்குப் பெருமை சேர்த்தவராம். இந்த பின்லேடன் பற்றிய கட்டுக்கதையெல்லாம் இன்னும் நம்புவதற்கு ஆளிருக்கிறது. .சரி ஈழப்போர் நடந்த போது இலங்கை அரசுக்கு புலிகளின் நடவடிக்கைகள் பற்றி உளவுத் தகவல்கள் வழங்கிய இரு நாடுகள் இந்தியாவும் அமெரிக்காவுமே. இந்தியா எட்டி உதைத்தாலு ஈழத் தமிழர்களுக்கு இந்தியா மீதான மூட நம்பிக்கை மாறாது. அதே போலத்தான் அமெரிக்காவின் மீதான் நம்பிக்கையும். புலிகளின் நடவடிக்கைகளை எப்படி அமெரிக்க உளவுத்துறை வேவுபார்த்திருக்கும், அவர்கள் உரையாடல்களைக் கேட்டிருக்கும், சிவலிங்கம் போன்ற தமிழர்கள்தானே உதவியிருப்பார்கள். அவர்களையும் கொண்டாடுவார்களா தமிழர்கள் ? சரி புலிகளின் தகவல்களை அறிய அமெரிக்க, இந்திய, இலங்கை அரசுகளுக்கு உதவிய ஒரு முஸ்லிம் என்று ஒரு செய்தி வருகிறது அதை எப்படி எதிர்கொள்வார்கள் இத் தமிழர்கள்.

எட்வர்ட் ஸ்னோடன், பிராட்லி மானிங்க் போன்றவர்கள் அமெரிக்கனாக இருந்தபோதும் மன்சாட்சியுடன் போலித்தனமான தேசபக்தியையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல், அரசின் கொடியமுகத்தை அம்பலப்படுத்தினர். சிலர் அமெரிக்கனாக இல்லாதபோதும் உளவுத்துறைக்குத் துதிபாடுகின்றனர்.    
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

ஜியாகானின் உருக்கமான இறுதிக் கடிதம் - இவர்கள் இப்படித்தான்


ஜியா கானின் கடிதத்தைப் படித்தால் என்ன தோன்றுகிறது.  திரைப்படங்களில் காணும் நாயகியைக் காட்டிலும் கிறுக்குத்தனமான பெண்ணாக இருந்திருக்கிறாள். ஒருவன் அயோக்கியன் என்று தெரிந்தும் அவனையே தொடர்ந்து காதலிப்பது, அதற்காகத் தன்னையே வருத்திக் கொள்வது இறுதியில் தற்கொலை செய்து கொண்டது.

சூரஜ் பஞ்சோலிக்கு இப்போதுதான் 23 (?? !!) வயது. ஜியாவைக்காட்டிலும் வயது குறைவு. இவர்கள் இரண்டு வருடங்கள் காதலித்திருந்தாலோ அல்லது இணைந்து வாழ்ந்திருந்தாலோ கூட அது சூரஜ் 20 வயதுகளில் ஆரம்பித்திருக்க வேண்டும். என்னவோ ?

  

திரைப்படத்தில் அறிமுகமாகும் கனவில் இருப்பவன் தன்னைவிட வயதில் மூத்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கா இருப்பார். அப்போதைக்கு கிடைத்ததை அனுபவித்து விட்டுப் போகிறவனாகத்தான் இருப்பார். இப்படி பத்தோடு பதினொன்றாகக் கிடைத்த ஒருத்தி காதலித்தால் அதையெல்லாம் அவர் கண்டுகொள்ளப்போவதில்லை. பிரச்சனை இவ்வளவு பெரியதாகும் என்று நினைத்திருக்க மாட்டார். தனது படம் வெளியாகவிருக்கும் நேரத்தில் தன் பெயரைக் கெடுத்து விட்டு செத்து போய்விட்டாள் என்று திட்டிக் கொண்டிருப்பார்.
சூரஜ் பஞ்சோலி
  ஒருவன் தன்னை ஏமாற்றுகிறான், உடலை பயன்படுத்துக் கொள்கிறான், மற்ற பெண்களுடன் சுற்றுகிறான் என்று தெரிந்த பின்னும் எப்படி ஒரு பெண்ணால் காதலிக்க முடிகிறது.  இலண்டனில் பிறந்து வளர்ந்தும் இந்திய மனப்பான்மை  இன்னும் அவருக்குள் மாறவில்லை.

 இப்படத் தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தியவனுக்காக தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டுமா என்று தோன்றுகிறது. காதலிக்கும் நபர் ஆணோ பெண்ணோ தன்னை மதிக்க வில்லை, தன்னை சீண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார், ஏமாற்றுகிறார் என்று தெரிந்தால் உதறிவிடுவதே உத்தமம். அதை விட்டு விட்டு குருட்டுத் தனமாக உணர்ச்சி வயப்பட்டால் யாருக்கு நட்டம். காதலிப்பவர்கள் எதற்குத் தயாராக இருக்கிறார்களோ இல்லையே இதற்குத் தயாராக இருக்க வேண்டும்.

எத்தனை  கதை கேட்டாலும் அயோக்கியர்களிடம் ஏமாறுவதே எமக்கு இலட்சியம் என்று திரிகிறார்கள்  :((

அந்த அயோக்கியன் செய்திருக்கும் காவாலித்தனங்களைப் பார்த்தால் !! தன்னிடம் மயங்கிய ஒரு பெண்ணை என்னவெல்லாம் செய்ய முடியுமோ செய்து விட்டு, எப்படியெல்லாம் அனுபவிக்க முடியுமோ அனுபவித்து விட்டு கொடுமைப்படுத்திவிட்டு, உடல் மன ரீதியில் தொல்லை செய்து விட்டு அந்தா இந்தா என்று போக்கு காட்டியிருக்கிறான், இவள் இல்லாவிட்டால் இன்னும் பல பேர் அவனுக்குக் கிடைக்காமலா போய்விடுவார்கள். திரைப்படத்தில் நாயகனாக வேறு அறிமுகமாகப் போகிறார். இவளோ ஒரு தோல்வியடைந்த நடிகை. தனது எதிர்காலத்தை ஒப்பிட்டால் இவளுடைய உறவு அவனுக்கு நிச்சயம் கசந்து போயிருக்கிறது. அவளுக்கு இவனே எதிர்காலமாய்த் தெரிந்திருக்கிறான். அவளும் பொறுத்துப் பார்த்துவிட்டு இறந்து விட்டாள். இவனிடம் போய் எப்படி அன்பை எதிர்பார்த்தாள் ?

திருமணத்திற்கு முன் இணைந்து வாழ்தல், பாலியல் உறவு இதெல்லாம் நம் நாட்டு ஆண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான். ஆடே கசாப்புக் கடையைத் தேடிப் போனது போலத்தான். அதிலும் பெண்களை பாலியல் ரீதியில் சுரண்டுவதற்கு எளிதான் திரைப்படத் துறையில்தான் இது போன்ற அயோக்கியர்கள் அதிகமிருப்பார்கள். இந்த ஜென்மங்களையெல்லாம் நேசித்து பதில் அன்பை  எதிர்பார்த்து உயிரை விடுவது பரிதாபமானது. 


 

ஜியாகானின் உருக்கமான இறுதிக்கடிதம் 

I don't know how to say this to you but I might as well now as I have nothing to lose. I've already lost everything. If you're reading this I might have already left or about to leave. I am broken inside. You may not have known this but you affected me deeply to a point where I lost myself in loving you. Yet you tortured me everyday. These days I see no light I wake up not wanting to wake up. There was a time I saw my life with you, a future with you. But you shattered my dreams. I feel dead inside. I've never given so much of myself to someone or cared so much. You returned my love with cheating and lies. It didn't matter how many gifts I gave you or how beautiful I looked for you. I was scared of getting pregnant but I gave myself completely the pain you have caused me everyday has destroyed every bit of me, destroyed my soul. I can't eat or sleep or think or function. I am running away from everything. The career is not even worth it anymore.

When I first met you I was driven, ambitious and disciplined. Then I fell for you, a love I thought would bring out the best in me. I don't know why destiny brought us together. After all the pain, the rape, the abuse, the torture I have seen previously I didn't deserve this. I didn't see any love or commitment from you. I just became increasingly scared that you would hurt me mentally or physically. Your life was about partying and women. Mine was you and my work. If I stay here I will crave you and miss you. So I am kissing my 10-year career and dreams goodbye. I never told you but I received a message about you. About you cheating on me. I chose to ignore it, decided to trust you. You embarrassed me. I never went out, I never went with anyone else. I am a loyal person. I never met anyone with Karthik I just wanted you to feel how you make me feel constantly. No other woman will give you as much as I did or love you as much as I did. I can write that in my blood. Things were looking up for me here, but is it worth it when you constantly feel the pain of heartbreak when the person you love wants to abuse you or threatens to hit you or cheats on you telling other girls they are beautiful or throws you out of their house when you have no where to go and you've come to them out of love or when they lie to your face or they make you chase after them in their car. Or disrespects their family. You never even met my sister. I bought your sister presents. You tore my soul. I have no reason to breathe anymore. All I wanted was love. I did everything for you. I was working for us. But you were never my partner. My future is destroyed my happiness snatched away from me. I always wished the best for you, was ready to invest what little money I had in your betterment. You never appreciated my love, Kicked me in the face. I have no confidence or self esteem left, whatever talent whatever ambition you took it all away. You destroyed my life. It hurt me so much that I waited for you for ten days and you didn't bother buying me something.
The Goa trip was my birthday present but even after you cheated I still spent on you. I aborted our baby when it hurt me deeply. You destroyed my Christmas and my birthday dinner when I came back. When I tried my hardest to make your birthday special. You chose to be away from me on Valentines Day. You promised me once we made it to one year we would get engaged. All you want in life is partying, your women and your selfish motives. All I wanted was you and my happiness you took both away from me. I spent money on you selflessly you would throw in my face. When I would cry for you. I have nothing left in this world to live for after this. I wish you had loved me like I loved you. I dreamt of our future. I dreamt of our success. I leave this place with nothing but broken dreams and empty promises. All I want now is to go to sleep and never wake up again. I am nothing. I had everything. I felt so alone even while with you. You made me feel alone and vulnerable. I am so much more than this."


    


Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

காதல் வலியது


ஜியாவின் இறப்பைக் கேள்வியுற்றபோது இவளுக்கெல்லாம் என்ன குறைச்சல் என்று நினைத்தேன். லண்டனில் பிறந்து வளர்ந்து பின்பு நடிப்பதற்காக இந்தியா வந்து பிரகாசிக்க முடியாமல் தோல்வியடைந்து, காதல் கசந்து பின்பு தற்கொலை செய்துகொண்டார். காதல் தோல்வியால் தற்கொலை, கொலை செய்வதெல்லாம் நம்மைப் போன்ற சராசரி மனிதர்களிடம் உள்ள வழக்கம். இப்படி பணக்கார பிரபலங்கள் கூட இப்படி செய்து கொள்கிறார்களா என்று தோன்றியது. இது போன்ற தோல்விகளை அதுவும் காதல் தோல்விகளை ஒரு பொருட்டாகவா அவர்கள் கருதுகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்களும் அதே உணர்வுகள் உருவானவர்கள்தான் போலும். 

ஜியா கான் / நஃபிஸா கான்
18 வயதில் அமிதாப் நடிக்கும் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் உருவான "நிஷப்த்" படத்தில் அறிமுகமாகிறார். பின்பு அமீர்கானின் "கஜினி" (தமிழ் - கஜினியில் நயன்தாராவின் வேடத்தில்) நடித்தார். இப்படி பெரிய நடிகர்களுடன் முதலிரண்டு படங்களில் நடித்தும் அவள் எதிர்பார்த்தது போல் நல்ல வாய்ப்புக்கள் எதுவும் அதற்குப் பிறகு வரவில்லை. இரு வருடங்களுக்கு முன்பு ஹௌஸ்ஃபுல் (Housfull) படத்தில் சிறுவேடம் மட்டுமே கிடைத்தது. அறிமுகமாகி ஆறு வருடங்கள் ஆகி விட்டது. இன்டீரியர் டிசைனர் ஆகலாம் என்று முடிவெடுக்கிறார். ஹைதராபாத்தில் ஒரு நிகழ்ச்சிக்குச் செல்கிறார்.  அதுவும் தோல்வியில் முடிகிறது. பின்பு தனது காதலனுடன் நடந்த சண்டையில் வீட்டிலேயே துப்பட்டாவால் தூக்குப் போட்டுக் கொள்கிறார்.

பட வாய்ப்புக்கள் எதுவும் இல்லாததால் ஏற்பட்ட மனவருத்தத்தில் இருந்ததாகவும் சொல்கிறார்கள். ராம் கோபால் வர்மா தன்னை சந்திக்க ஜியா வந்ததாகவும், "இத்தனை வருடங்களாக நான் கண்ணாடியில் எனது முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன், எனக்கு என்ன குறை எனக்கு ஏன் வாய்ப்புக்கள் வரவில்லை என்று தெரியவில்லை என்று கூறினாள். ஆனால் அவளுக்குப் பொருத்தமான பாத்திரம் தன்னுடைய படங்களில் இல்லாததால் அவளை நடிக்க வைக்க முடியவில்லை அதனால் அவளிடம் காத்திருக்கும்படியும் கூறினேன்" ஆறு வருடங்களாக மிகப்பெரிய வாய்ப்புகள் ஏதும் வராததால் மனமுடைந்திருக்கலாம் என்று கூறினார். ஆனால் தற்போது ஒரு படம் ஒப்பந்தமாகியிருப்பதாக தன்னிடம் தெரிவித்ததாகவும் ஜியாவின் தங்கை சொல்லியிருக்கிறார். அதனால் அவள் தனது திரைப்பட வாழ்க்கையில் தோல்வியடைந்தது மனமுடையவில்லை, அவள் குடிக்கு அடிமையாகவுமில்லை என்று கூறியிருக்கிறார்.

தனது ட்விட்டரில் தன்னைப் பற்றி நடிகை, கவிஞர், இசைக் கலைஞர், கனவு காண்பவள், வாழ்க்கையை ரசிப்பவள் என்று எழுதி வைத்திருக்கும் ஒரு 25 வயதுப் பெண் தற்கொலை செய்துகொண்டாள் என்று சொன்னால் நம்ப முடியவில்லை. ஆனால் உண்மை காரணம் காதல் தோல்வி.

காதலில் தோல்வி என்பதற்காக உயிரை விடுமளவிற்கு காதல் வலிமையான உணர்வா ? கொலை செய்வது, அமிலம் ஊற்றுவது போன்ற பிசாசுகளைப் பற்றியெல்லாம் பேசவே தேவையில்லை. அவரவர் உயிரையே மாய்த்துக் கொள்ளுமளவுக்கா காதல் வலியது ?  அங்கங்கே படித்த படிக்கும் செய்திகள் அப்படித்தான் சொல்கின்றன. சில செய்திகள் எத்தனை நாட்களானாலும் மறப்பதில்லை. ஆள் ஊர் பெயர் மறந்தாலும் அந்த நிகழ்ச்சியின் வீரியம் அதை மறக்க முடியாமல் செய்து விடுகிறது. ஜியா  ஒரு பிரபலம் அல்லது நடிகை என்பதால் எனக்கு தனிப்பட்ட கரிசனம் ஏற்படவில்லை.

ஒரு செய்தியில் தம்பதியினர் இறப்பைப் பற்றியது கணவர் இறந்த அந்நாள் நண்பகலிலேயே மனைவியும் இறந்து விடுகிறார். இவர்களிருவரும் 80 வயதைக் கடந்தவர்கள்.

மனைவி இறந்த துக்கம் தாளாமல் தூக்குப் போட்டுக் கொண்ட கணவர்

இன்னொரு செய்தியில் வட இந்தியாவில் லாரி ஒட்டுநராகச் சென்ற தன் கணவர் இறந்த செய்தி கேட்டு கர்ப்பிணியாக இருக்கும் மனைவி தன் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி செய்தார்.

இப்படிப் பல செய்திகள் அவ்வப்போது கேள்விப்படுகிறோம்.

நடிகைகள் போன்ற பணக்காரர்கள் காதல் தோல்வியடைந்தால் துடைத்து விட்டு வேலையைப் பார்க்கத் தொடங்கி விடுவார்கள். ஆனால் காதல் தோல்விகளால் தற்கொலை செய்து கொண்ட நடிகைகள் இருக்கிறார்கள். தமிழ்த் திரையுலகில் ஷோபா, ஃபடாபட் ஜெயலட்சுமி, விஜி, சில்க் ஸ்மிதா, ப்ரத்யுஷா, மோனல் என்று நீள்கிறது. சின்னத்திரை, துணை நடிககள் யார் யாரோ தெரியவில்லை.

அம்மாவோ அப்பாவோ இறந்தால் அல்லது பிரிந்தால் அல்லது சண்டையிட்டால் யாரும் தற்கொலை செய்து கொள்வதில்லை

அண்ணனோ தம்பியோ இறந்தால் அல்லது பிரிந்தால் அல்லது சண்டையிட்டால் யாரும் தற்கொலை செய்து கொள்வதில்லை

அக்காவோ தங்கையோ இறந்தால் அல்லது பிரிந்தால் அல்லது சண்டையிட்டால்யாரும் தற்கொலை செய்வதில்லை

நண்பர்கள் இறந்தால் அல்லது பிரிந்தால் அல்லது சண்டையிட்டால் யாரும் தற்கொலை செய்வதில்லை.

சில தற்கொலைகள் நடந்திருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிகச் சிறிய எண்ணிக்கையிலேயே இருக்கின்றன.

ஆனால் தான் காதலித்த நபரோ, வாழ்க்கைத் துணையோ அல்லது அவர்களது பிரிவோ ஏற்படுத்தும் மனவேதனை தற்கொலையை நோக்கித் தள்ளுகிறது.

காதலுக்காக பெற்றோரையே விட்டுவிடத் துணிகிறார்கள்

சொத்தை விட்டுவிடத் துணிகிறார்கள்

மதம் மாறி கடவுளையும் மாற்றிக் கொள்கிறார்கள்.

காதல் உண்மையில் மகத்தானதுதான்.

காதல் இருக்கட்டும். என்னுடைய நண்பனொருவனின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியைக் கேட்டால் இன்னும் கொஞ்சம் தலை சுற்றும்.  அவன் மற்ற சராசரி ஆண்களைப் போல் பெண்களுடன் பேசுவதில் எவ்வித கிளுகிளுப்பும் பரவசமும் கொள்ளாதவன், பெண்களுடன் பழகுவதையே வெறுத்தவன். திருமணமே வேண்டாம் என்று இருந்தவன். இறுதியாக பெண் தேடும் படலம் தொடங்கிய போது, வெவ்வேறு இடங்களிலிருந்தும் அவனுக்கு வரன்கள் வந்தன. இறுதியாக ஒரு இடத்தில் திருமணமும் முடிவாகியிருந்தது. இதற்கு முன்பும் பல பேருடன் பேச்சுவார்த்தையும் நடந்து கொண்டிருந்தது. அதனால் மாப்பிள்ளை தேடிய சில பெண்கள் இவனுடன் அவ்வப்போதுஅலைபேசியிலும் பேசியிருக்கிறார்கள். வெவ்வேறு காரணங்களால் அவர்கள் யாரும் கூடி வரவில்லை.

இப்போது ஒரு பெண்ணுடன் இவனுக்கு நிச்சயமான பிறகும், இன்னும் மூன்று பெண்கள் தன்னையே திருமணம் செய்து கொள்ளும்படி அவனை வற்புறுத்தினார்கள். திரும்பத் திரும்ப அலைபேசியில் அழைத்துப் பேசினார்கள். அவனுக்கு ரொம்பவும் சங்கடமாகப் போய்விட்டது. இதில் ஒன்று மிகப் பெரிய தொகையாக சீதனம் கொடுப்பதற்கும் முன் வந்தார்கள். அந்த மூன்று பேரில் இன்னொரு பெண் இவனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது தெரிந்த பின்னர் தூக்க மாத்திரையை விழுங்கி விட்டாள். இதில் வேடிக்கை என்னவென்றால் அம்மூவரும் இவனை நேரில் கூடக் காணாதவர்கள். புகைப்படத்தில் கண்டதோடு சரி, அலைபேசியில் பேசியது மட்டுமே அவர்களுக்கிடையிலான தொடர்பு. இதையும் என்னால் நம்ப முடியவில்லை.

ஆண்கள் சிலர் ஒரே சமயத்தில் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பார்கள், பொழுது போக்குவார்கள். ஆனால் என்னுடைய நண்பன் வேறு விட இயல்புடையவன். பேசியே மயக்குமளவுக்கு இவனிடம் சரக்குமில்லை. பெரிய பணக்காரனுமில்லை. நல்ல ஊதியம் வாங்கும் பணியிலுமில்லை. அரசாங்க வேலையுமில்லை, சாதாரண தனியார் நிறுவனத்தில்தான் பணி புரிகிறான். இதையெல்லாம் தாண்டி அந்தப் பெண்கள் இவனிடம் எதை விரும்பினார்கள், திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார்கள் என்று சிந்தித்துப் பார்த்தால் இன்னும் புரியவில்லை. இதையேதான் அவனும் என்னிடம் சொன்னான். நானும் அவனிடம் சொன்னேன். இருவரும் சிரித்துக் கொண்டோம். பெண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன். அவர்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் மனம் மாறலாம். ஆனால் தூக்க மாத்திரையை விழுங்குமளவிற்கு திடீரென்று தோன்றும் அவநம்பிக்கைக்குக் காரணமென்ன ?

பெண்கள் என்றால் காதலித்து ஏமாற்றுகிறவர்கள், பணத்திற்கு ஆசைப்படுகிறவர்கள் என்று சொல்பவர்கள்தான் சிந்திக்க வேண்டும். காதல் நாம் நினைப்பதை விட வலியது.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

சீமானுக்கு ஒரு சலாம் - சீமான் பாராட்டப்பட வேண்டியவரே !


எனக்கு சீமானின் இந்த நடவடிக்கை இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் இது மிகவும் துணிச்சலான நடவடிக்கையாகும். நேர்மையானதும் கூட. இதை வைத்து சீமான் கைது செய்யப்படக் கூடும், பலவித அடக்கு முறைகளை எதிர்கொள்ளக் கூடும். கலைஞர் ஆட்சியில் மட்டுமே எல்லாரும் வீரம் பேசுகிறார்கள் ஜெவிடம் பம்மி விடுகிறார்கள் என்று பொதுவாக நம்புகிறோம். ஆனால் ஜெவின் ஆட்சி நடக்கும் போது இப்படி ஒரு தலைவரை வரவைத்து பேச வைத்திருப்பது துணிச்சலான செயலே.

அதே நேரம் யாசின் மாலிக் என்ற தாடி வைத்த முஸ்லிம் மனிதனைப் பார்த்தவுடன் இஸ்லாமோஃபோபியா விஸ்வரூபம் எடுத்துவிட்டதைப் பலரிடம் காண முடிகிறது. இது ஈழத்துக்கு எதிராக இந்தியாவைத் திருப்பி விடும் என்றும் அஞ்சுகிறார்கள். இதற்கு மேலும் இந்தியா ஈழத்துக்கு செய்வதற்கு ஏதாவது இருக்கிறதா என்ன ?

யாசின் மாலிக் ஒரு "தீவிரவாதியோ" தீவிரவாத இயக்கத் தலைவரோ கிடையாது. ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கம் ஒரு ஜனநாயக இயக்கம் மட்டுமே. அங்கு இருக்கும் ராணுவ அடக்கு முறைகளுக்கு எதிராகவும், அரசியல் உரிமைக்காகவும் போராடுகிற இயக்கம் மட்டுமே. தமிழ்நாட்டில் கூட தனித் தமிழ்நாடு என்ற கோரிக்கையை அறிவித்துக் கொண்டு சிறு சிறு இயக்கங்கள் இயங்குகின்றன. இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை தேசிய வியாதிகள் நினைவூட்டிக் கொள்ளவும்.

யாசின் மாலிக்
இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் என்று பீதியைக் கிளப்பி, சீமானை குற்றவாளிக் கூண்டில் தள்ள முனைகிறவர்கள், சிங்கள ராணுவமே இந்திய இறையாண்மைய மதிப்பதில்லை என்பதையும் நினைவூட்டிக்கொள்ளவும். அந்த சிங்கள ராணுவம் இந்திய இறையாண்மையை மதிக்காத போதும் அவர்களுக்கு இறையாண்மையுடைய இந்தியா பயிற்சி அளிக்கிறது என்பதையும் நினைவூட்டிக் கொள்ளவும். இறையாண்மையுடைய இலங்கையின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடாது என்று சொல்லிக் கொண்டதையும் நினைவூட்டிக் கொள்ளவும். தற்போது சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்து விட்டதாக தேசபக்தர்கள் சிலிர்த்து எழுந்த போதும், சீனப் பிரதமர் இந்தியாவிற்கு மிகவும் சாதாரணமாகவே வந்து போகிறார்.

காஷ்மீருக்கு சீனா தனி விசா கொடுத்ததை எதிர்ப்பவர்கள், சீனாவின் எதிரியான தலாய் லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுப்பதையும் எதிர்க்க வேண்டும், வங்கதேசப் பிரிவினை பாகிஸ்தானின் இறையாண்மைக்கு எதிரானது, திபெத் சீனாவின் இறையாண்மைக்கு எதிரானது. ஈழம் இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது. இந்தியாவுக்கு மட்டும்தான் இறையாண்மையா ? இல்லை இந்தியர் என்பதால் இந்த பாரபட்சமா ? அவரவர்க்கு அவரவர் இறையாண்மை. இதில் இந்தியர்கள் மற்ற நாடுகளின் இறையாண்மைக்கு எதிராக மட்டும் நடக்கலாமா? அங்கெல்லாம் அடக்கு முறை நடக்கிறது என்பது பதிலென்றால் காஷ்மீரிலும் அதுதானே நடக்கிறது. மற்ற நாடுகளின் அடக்குமுறைகளை எதிர்ப்பேன், அதே அடக்குமுறை இந்தியாவில் நடந்தால் தேசப்பற்றின் பெயரால் ஆதரிப்பேன். இதுதான் இங்கே நிலைப்பாடு. 

இந்திராவின் படுகொலையைத் தொடர்ந்து காங்கிரஸ் கொலைகாரர்களால் டெல்லியில் வாழ்ந்த 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் சீக்கியர் அமைப்புகள் இலண்டனில் தமிழினப்படுகொலையைக் கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டம். சீக்கியர்களின் ஆதரவாவது தமிழர்கள் ஏற்கிறார்களா  இல்லை இந்திரா காந்தியைக் கொன்ற பிரிவினைவாத காலிஸ்தான் சீக்கிய பயங்கரவாதிகளின் ஆதரவு எமக்கு வேண்டாம் என்கிறீரா ?
இங்கு இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள், பிரிவினைவாதிகள், தேசப்பாதுகாப்புக்கு எதிரானவர்கள் என்றெல்லாம் சொல்லப்படுவதற்கு ஒருவர் தீவிரவாதியாக இருக்க வேண்டியதில்லை. ஈ காக்காவுக்குக் கூட துரோகம் செய்யாத கூடங்குளம் உதயகுமார் கூட கிறித்தவர் என்ற காரணத்தை வைத்து அவரைக் கொல்ல வேண்டும் என்று வெறியேறிப் பேசும் தேசபக்தர்கள் இருக்கிறார்கள்.

இதை எதிர்ப்பவர்கள் யார் யாரென்றால் பாரதிய ஜனதா, காங்கிரஸ், இந்து மக்கள் கட்சியினர். இந்தியாவையே அந்நியனுக்குக் கூட்டிக் கொடுக்கும் இவர்கள் இந்திய இறையாண்மையைப் பற்றிப் பேசுவது வேடிக்கை. இந்து மக்கள் கட்சியின் கொள்கை தெரிந்ததுதான், அவர்கள் தனது கடமையைச் செய்கிறார்கள் அவர்களை நான் விமர்சிக்க மாட்டேன்.

எனக்கு என்ன கசப்பென்றால் இதை விமர்சிக்கும் ஈழ ஆதரவாளர்கள். ஈழத் தமிழர்கள் அடைய வேண்டிய உரிமைகளின் நியாயத்தை அறிந்த இவர்களுக்கு காஷ்மீர் அடைய வேண்டிய நியாயம் தெரியவில்லை. ஈழத் தமிழர் உரிமை பற்றிப் பேசும் போது புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம்களைப் பேசாத வாய்கள், காஷ்மீர் என்று வந்து விட்டால் அங்கிருந்து விரட்டப்பட்ட இந்து பண்டிட்களைப் பற்றிச் சொல்லி, தீவிரவாதப் பட்டம் கட்டி கொச்சைப்படுத்துகிறார்கள். இந்து- முஸ்லிம் நல்லிணக்கத்தின் இலக்கணமாய் விளங்கிய காஷ்மீர் நடக்கக் கூடாததெல்லாம் நடந்து இஸ்லாமியர்-பிரிவினைவாதம்-தீவிரவாதம் என்று செல்லரித்துப் போன காரணங்களைச் சொல்லி எதிர்க்கிறார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் இவர்கள் உலகத்தின் மிக மோசமான தீவிரவாத இயக்கம் என்று உலகத்தால் வர்ணிக்கப்பட்ட புலிகளையும் ஆதரிக்கிறார்கள். அது எப்படி ஒருவர் ஈழத்தை ஆதரித்துக் கொண்டு காஷ்மீரை எதிர்க்க முடியும். நான் இரண்டும் ஒரே பிரச்சனை என்று சொல்லவில்லை. ஆனால் போர், நில ஆக்ரமிப்பு என்பதைத் தவிர இரு பக்க மக்களுமே ராணுவ அடக்கு முறைகளை நாளும் எதிர்கொள்கிறவர்கள்தானே. தமிழனுக்கு வந்தால் குருதி காஷ்மீரிக்கு வந்தால் தக்காளி சட்னியா ? ஏன் ஈழத்தமிழர்கள் தங்களை யூதர்களுடன் ஒப்பிட்டுக் கொள்ளவில்லையா ?

தமிழ்நாட்டிலிருக்கும் பெரும்பான்மைத் தமிழர்கள், தமிழரல்லாத மற்ற இந்தியர்கள் ஈழத் தமிழர் பிரச்சனையை எப்படிப் பார்ப்பார்கள். இங்கிருந்து போய் இன்னொருவனிடம் தனிநாடு கேட்டால் அவன் சும்மா இருப்பானா? ஈழத் தமிழர்கள் மண்ணின் மைந்தர்கள் என்பதைக் கூடத் தெரியாத மண்டைகளுக்கு இதுதான் உண்மை என்று சொல்லிப் புரிய வைப்பதற்குள் உயிரே போய்விடுகிறது. அதே போல் பொதுப் புத்தியில், காஷ்மீர் என்பது எப்படிப் புரிந்து கொள்ளப்படுகிறது  காஷ்மீர் இந்தியாவைச் சார்ந்தது, பாகிஸ்தான் துண்டாட நினைக்கிறது, காஷ்மீரிகள் பிரிவினைவாதிகள், இஸ்லாமியத் தீவிரவாதிகள். இதைத் தாண்டி உண்மை என்னவென்று அறிய எவரும் விரும்புவதில்லை. காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை என்று எதுகை மோனையாகப் பேசுமளவிற்கு வரலாறு திரிந்துள்ளது. உண்மையை விளக்கினால் தேசத் துரோகியாக்கி விடுகிறார்கள். அவர்கள் ஏன் நம்மைப் போல அமைதியாக வாழ்ந்து கிரிக்கெட்டை ரசிக்காமல் தெருவில் ராணுவத்திற்கு எதிராக உயிரைப் பணயம் வைத்துப் போராடுகிறார்கள் என்று சிந்திப்பதே இல்லை.  


தமிழர்கள் இனப்படுகொலையை சந்தித்தவர்கள் சம உரிமை மறுக்கப்பட்டவர்கள், ஆனால் காஷ்மீரிகள் சிறப்பு அதிகாரமுடையவர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் மற்ற மாநிலங்களுக்கு இல்லாத சிறப்பு உரிமை காஷ்மீர்க்கு மட்டும் ஏன் இருக்கிறது என்று கேட்க வேண்டுமல்லவா ? அதில்தான் காஷ்மீர் ஏமாற்றப்பட்ட வரலாறே இருக்கிறது. பாகிஸ்தான் படைகள் நுழைந்த போது காஷ்மீரைக் காக்க இந்தியாவின் உதவி நாடப்பட்டது. இந்தியா ஆக்ரமிப்பு நோக்கத்துடன் காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொள்ளப்படாது என்றும், அவர்கள் ஆளும் அதிகாரம் அவர்களிடமே இருக்கும் என்றும் உறுதிமொழியுடன்தான் இணைத்துக் கொள்ளப்பட்டது.

காஷ்மீரிகள் ஜம்முவின் குடிகள், நாம் இந்தியக் குடிகள் என்பது போல

காஷ்மீருக்கு தனிக் கொடி உண்டு

தனி அரசமைப்புச் சட்டம் உண்டு
காஷ்மீர் கொடி
இப்படிப் பல உரிமைகள் 1957 இல் இந்திய அரசாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டவையே. பல வருடங்கள் முடிந்த பின்னரும், வாக்கெடுப்பு நடத்தப்படாமல் இழுத்தடித்தாலேயே அவர்கள் போராட வேண்டியதாயிற்று. மேலும் ராணுவம், துணை ராணுவம், ஊர்க்காவல் படை என ராணுவத்தின் மூஞ்சியிலேயே 20 வருடங்களுக்கும் மேலாக வாழ வேண்டிய நிர்பந்தம்.

பின்பு உரிமைகளின்றி அடக்குமுறையும், புறக்கணிப்பும் தொடர்ந்த பின்னரே விடுதலைப் போராட்டம் தொடங்கியது 1980களின் பிற்பகுதிகளில். ராணுவ நடவடிக்கைகள் காரணமாக 70000 க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், வீதியில் சோதனைகள், கைதுகள், கடத்தல், காணாமல் போதல் என்ற ராணுவத்தின் கொடுமைகள் நாளும் நடக்கின்றன.

அமர்நாத் பனிலிங்கத்தை வணங்குவதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கிறார்களே அந்தக் குகையைக் கண்டு பிடித்தவரே ஒரு முஸ்லிம். யாத்திரை செல்கிறவர்களுக்கு வேண்டிய அடிப்படை உதவிகளைச் செய்கிறவர்களும் முஸ்லிம்களே. எனவே அவர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அப்படி இருப்பவர்கள் ஏன் இந்தியாவை எதிர்க்கிறார்கள் என்று எண்ண வேண்டாமா ? போராட்டம் நடக்கும் இடங்களில் அதை சிதைக்க இனவாதம், மதவாதம் தூண்டப்படுவது எல்லா அரசுகளும் செய்வதுதான். காஷ்மீரிலும் அதுதான் நடந்தது.

சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் ராணுவத்தினர் மீது கல்லை விட்டு எறிகிறார்களே ஏன் அப்படி ஆனார்கள் என்று சிந்திக்க வேண்டாமா ? இராணுவத்தின் கண்காணிப்பில் வாழும் கொடுமையைப் புரிந்து கொள்ள வேண்டாமா ?

காஷ்மீர் மட்டுமல்ல வடகிழக்கு மாநிலங்கள் பலவும் இந்நிலைதான் நிலவுகின்றன. மணிப்பூர் பெண்கள் நடத்திய நிர்வாணப் போராட்டம் ஒன்று போதும் இந்திய ராணுவத்தின் யோக்கியதைக்கு, ஈழத்திற்கு இசைப்பிரியா என்றால், மணிப்பூரில் மனோரமா தேவி, காஷ்மீரில் நிலோஃபர் ஜான் என எல்லா இடத்திலும் ஒரே வகையான வன்முறைகள்.

ஐரோம் ஷர்மிளா ஏன் 12 வருடங்களாக பட்டினிப் போராட்டம் நடத்துகிறார் ? என்றெல்லாம் யோசிக்காமல் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் என்று ஒரே அடியில் கொச்சைப் படுத்துகிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால் ?

இந்தக் கமல்ஹாசன் இருக்கிறாரே அவர் இஸ்லாமோஃபோபியாவுக்கு எதிரானவர், கமல் ஹாசன் என்ற தனது பெயர் தான் எந்த மதத்தைச் சார்ந்தவன் (இந்துவா அல்லது முஸ்லிமா) என்ற குழப்பத்தை மற்றவர்க்க்கு ஏற்படுத்துவதை பெருமையாகக் கருதிகிறவர். ஷாருக் கான் தனது இஸ்லாமியப் பெயரால் அமெரிக்க விமானத்துறை அதிகாரிகளால் அவமானப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தனது பெயரை அரபி ஒலியுடன் இருக்குமாறு மாற்றிக் கொள்வதாகக் கூறினார். அவ்வளவு மனிதாபிமானமுடையவர் தனது விஸ்வரூபம் படத்தில் அமெரிக்காவினால் ஆக்ரமிக்கப்பட்ட ஆஃப்கானிஸ்தான் தாலிபான்களிடமிருந்து அமெரிக்காவைக் காக்கும் இந்தியனாக நடித்தார் என்பது எத்தகைய முரண்நகை. அப்படித்தான் இருக்கிறது சிலருடைய கருத்து. நான் இந்தியன் எனவே இந்தியா என்ன செய்தாலும் அது தவறில்லை நான் தேசபக்தியின் காரண்மாக ஆதரிப்பேன். நான் தமிழன் எனவே புலிகள் என்ன செய்தாலும் ஆதரிப்பேன் என்ற கொள்கையெல்லாம் எனக்கில்லை.

அது போலவே ஈழத் தமிழர்களின் துன்பத்தைக் கண்டு இரங்குகிறவர்கள், யாசின் மாலிக்கின் வருகையை எதிர்ப்பது எந்த வகையில் சேர்த்தி ? இவருக்காக ஆதரவு தரும் முஸ்லிம்களைக் கண்டு இவர்கள் முகம் சுளிக்கிறார்கள். முஸ்லிம்கள் என்றால் தீவிரவாத, பிரிவினைவாத, இறையாண்மைக்கு எதிரானவர்களை ஆதரிக்கிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால் ஈழத் தமிழர் துன்பம் பற்றிப் பேசினால் புலி பயங்கரவாதம் பற்றிப் பேசும் சோ வைப் போலவே நடந்து கொள்கிறார்கள். காஷ்மீரிகள் துன்பம் என்பது மற்ந்து பிரிவினைவாதம் மட்டுமே முன் தெரிகிறது.
 

புலிகளை நாம் ஆதரிப்பதை மற்ற மாநிலத்தவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். பிரதமர் ராஜீவைக் கொன்ற பயங்கரவாதிகளை ஆதரிக்கிறார்கள் தமிழர்கள்  என்றுதானே நினைப்பார்கள்.

யாசின் மாலிக்கை அழைத்து வருவது இந்தியாவை ஈழத்துக்கு எதிராகத் திருப்பாதா ? இப்போது இந்தியா ஈழத்தை எப்படிப்பார்க்கிறது ? இந்தியாவின் இறையாண்மை மேல் மதிப்புடையவர்கள் ஈழம் பற்றியே பேசக் கூடாது என்றுதான் இந்தியா சொல்கிறது, கருணாநிதி டெசோ மாநாடு அறிவித்தவுடன் சிதம்பரம் ஓடி வந்து ஈழம் என்ற சொல்லையே பயன்படுத்தக்கூடாது என்றும் அது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும் சொல்லவில்லையா ? ஈழ அகதிகள் தமிழகத்தில் எப்படி நடத்தப் படுகின்றனர் ?

5 வருடங்களுக்கு முன்பு இயக்குநர் சீமான் போர் நிறுத்தம் கோரி, தமிழ்த் திரை இயக்குநர்கள் கலந்து கொண்ட பட்டினி போராட்டத்தில் உரையாற்றினார். அவரது உரை பரந்த வரவேற்பைப் பெற்றது. அவரது கருத்துக்களை காங்கிரஸ், பாஜகவினர் பலரும் எதிர்த்தனர். அதற்குப் பின்பு அவர் பல முறை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறை சென்றார். பலரது ஆதரவையும் பெற்றார். ஈழ ஆதரவுப் போராட்டங்களினாலேயே அவர் பலருக்கும் பிடித்தவரானார். பின்பு ஜெயா தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்த போது பலத்த விமர்சனத்துக்குள்ளானார். பின்பு திமுகவை மட்டுமே எதிர்த்து வந்தார். நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணம் வெளியிடப்பட்ட போது இந்திய இறையாண்மையைக் காக்க செயல் படுவோம் என்ற வரிகளுக்கும், திராவிட எதிர்ப்புக்கும் கடுமையாக விமர்சிக்கப் பட்டார். இஸ்லாமியர்களையும் எச்சரிக்கையுடன் கையாளவேண்டும் என்றும் குறிப்பிட்டு அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டிருந்தனர். பின்னும் ஜாதிக் கூட்டங்கள்லெல்லாம் கலந்து கொண்டார். இனவெறியனாக நடந்து கொண்டார்.
அதற்கெல்லாம் பதிலாக இது அமைந்துள்ளது இவ்வளவு நாட்களுக்குப் பின்னர் ஒரு நேர்மையான செயலைச் செய்திருக்கிறார். இதற்கு தனக்கு பலத்த எதிர்ப்பு வரும், சிறை செல்லவும் நேரிடும் என்று தெரிந்தே செய்திருக்கிறார்.

வழக்கமாக ஈழத் தமிழர்க்காக முஸ்லிம்கள் குரல் கொடுப்பதில்லை என்று குறை கூறிக் கொண்டிருப்பார்கள், இங்கு காஷ்மீரிலிருந்து முஸ்லிம்கள் தலைவர் ஒருவர் ஆதரவு சொல்கிறார். இவர்கள் பிரிவினைவாதியின் ஆதரவு தேவையில்லை என்கிறார்கள். எங்கள் மீது குண்டு வீசிய இந்தியாவின் ஆதரவும், போருக்கு பணம் வழங்கிய மேற்கு நாடுகளின் ஆதரவும் மட்டுமே வேண்டும் என்கிறார்கள். 

இந்தியத் தலைவர்கள் இறையாண்மையுள்ள நாட்டில் தலையிட முடியாது என்கிறார்கள் ஆனால் காஷ்மீரின் இறையாண்மையில் மட்டும் தலையிடுகிறார்கள். காஷ்மீரிகள் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளாலும் ஆக்ரமிக்கப்பட்டவர்கள். 5 இலட்சத்திற்கும் மேலான ராணுவத்தினர் காஷ்மீரைக் காவல் காத்து வருகின்றனர். இதை வைத்து காஷ்மீர் மக்களை போலி என்கவுன்டரில் கொல்லவும், பெண்களை வன்புணரவும் செய்ய பல நூறு கோடிகள் செலவிடப் படுகின்றன. அதே நேரம் அடிப்படை உரிமைகள் வாழ்வாதாரம், வேலை என அனைத்தும் புறக்கணிக்கப்படுகின்றன. அதை எதிர்த்து அவர்கள் போராடினால் அது தேசபக்தர்களுக்கு பொறுக்கவில்லை.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment